Tuesday 18 February 2020

சௌராட்டிரர்

சௌராட்டிரர் தற்போதைய குஜராத மாநிலத்தில் உள்ளராஜ்கோட் மாவட்டம்,
பவநகர் மாவட்டம்,ஜாம்நகர் மாவட்டம்,அம்ரேலி மாவட்டம் ,
ஜூனாகாத் மாவட்டம்,போர்பந்தர் மாவட்டம்,
தேவபூமி துவாரகைமாவட்டம், கிர்சோம்நாத்மாவட்டம், சுரேந்திரநகர்மாவட்டம், மற்றும்
அகமதாபாத்மாவட்டத்தின்
கிழக்கு மற்றும்
தென்கிழக்குப்
பகுதிகளில்
வாழ்ந்தவர்கள்.
அலாவுதீன் கில்ஜி
மற்றும் கஜினி முகமது
போன்ற
ஆக்கிரமிப்பாளர்களின்
கொலை
வெறியாட்டத்திற்கு
அஞ்சியும், கட்டாய
இசுலாமிய மத
மாற்றத்திற்கு
அஞ்சியும்,
சௌராஷ்ட்டிர தேசத்து
சௌராட்டிரர்கள் கி.பி.,
1025 முதல்
புலம்பெயர்ந்து, பல
இடங்களில்
பல்லாண்டுகள் சுற்றித்
திரிந்து இறுதியாகத்
தமிழ்நாட்டை தாயகமாகக்
கொண்டு வாழ்கின்றனர்.
புலப்பெயர்வுகள்
1024-1025இல்
கஜினி முகமது
சௌராட்டிர
தேசத்தினையும்,
சோமநாதபுரத்தில் உள்ள
சிவன் கோயிலையும்
சூறையாடிய பின்,
அங்கு வாழ்ந்த
சௌராட்டிரர்களின்
பெரும் பகுதியினர்,
தேவபூமி துவாரகை
மாவட்டத்தின்
தலைமையகமான
காம்பாலியம் நகரத்தில்
குடியேறி அறுபது
ஆண்டுகள் வாழ்ந்த பின்,
தற்போதைய
மகாராட்டிரத்தில் உள்ள
தேவகிரியில்
குடியேறி 300 ஆண்டுகள்
வாழ்ந்தனர். பின்னர்
தில்லி சுல்தான்
அலாவுதீன் கில்ஜியின்
படைத்தலைவரான மாலிக்
கபூர் தேவகிரியை 1307ல்
கைப்பற்றியபின்பு,
இந்துக்களின் புகழிடமாக
விளங்கிய விஜயநகரப்
பேரரசுசில் 1312ல்
குடியேறினர். விஜயநகரப்
பேரரசு,
பாமினி சுல்தான்களால்
ஆக்கிரமிப்பு
செய்யப்பட்ட பின்னர்
சௌராட்டிர சமூக மக்கள்
1675க்குப்
பின்பு தமிழ்நாட்டை
ஆண்டு கொண்டிருந்த
தெலுங்கு நாயக்கர்
மன்னர்கள் ஆளும்
பகுதிகளில்
குடியேறினர்.
சௌராஷ்ட்ர
விஜயாப்தம்
சௌராட்டிரர்கள்
சௌராட்டிர
தேசத்திலிருந்து
வெளியேறி, விசயநகரப்
பேரரசில் குடியேறிய
ஆண்டான கி. பி., 1312-ஆம்
ஆண்டு முதல்
சௌராஷ்ட்டிர
சௌராஷ்ட்ர விஜயாப்தம்
துவங்குகிறது.
தமிழ் நாட்காட்டிப்படி
சித்திரை மாதம்
ஒன்றாம் நாள்
சௌராஷ்ட்டிரர்களின்
புத்தாண்டு
துவங்குகிறது. 14
ஏப்பிரல் 2012 முதல் 13
ஏப்பிரல் 2013 முடிய உள்ள
காலம்
வரை சௌராஷ்ட்டிர
விஜயாப்தம் 700
ஆண்டுகள்
நிறைவு பெற்றுள்ளது.
மக்கட் தொகை
2001ஆம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கீட்டின்படி
இந்தியாவில் மொத்தம்
10,10,562 சௌராட்டிரர்கள்
வாழ்கிறார்கள்.
வாழ்விடங்கள்
சௌராட்டிர மொழி
பேசும் மக்கள் தமிழ்
நாட்டில் காஞ்சிபுரம் ,
ஆரணி, ஆம்பூர்,
வாலாஜாபேட்டை,
புவனகிரி, சிதம்பரம்,
சேலம் ,அம்மாபேட்டை
நாமக்கல், இராசிபுரம் ,
பரமத்தி, தஞ்சை,
திருபுவனம், தாராசுரம்,
துவரங்குறிச்சி,
திருவாரூர்,
கும்பகோணம்,
திருவையாறு ,
அம்மையப்பன், சேலம் ,
மாரியம்மன் கோயில்
(தஞ்சை), அய்யம்பேட்டை,
திருச்சி, உறையூர்,
திருவாப்பூர்,
(புதுக்கோட்டை),
இலுப்பூர், பரம்பூர்,
அறந்தாங்கி,
திண்டுக்கல்,
பெரியகுளம்,
நிலக்கோட்டை, மதுரை,
பரமக்குடி, எமனேசுவரம் ,
இராமநாதபுரம் ,
பாளையங்கோட்டை ,
கிளாக்குளம்,
வெள்ளாங்குழி,
வீரவநல்லூர், மற்றும்
கோட்டாறு
(நாகர்கோவில்)
பெயர்க் காரணம்
சௌ எனும் சொல் இந்தி
மொழியில் (सौ) =
நூறு எனவும்,
ராஷ்டிரம் எனும்
சொல் ’பெரும் பகுதி ’
என்றும்
பொருள்படும்.
நூறு பகுதிகளில்
வாழ்ந்தவர்கள்
இந்தி மொழியில்
செளராஷ்டிரர் என
வழங்கலாயிற்று.
மேலும் ’செளரம்’எனும்
சொல் சமசுகிருதம்
மொழியில் சூரியனை
குறிக்கும்,
செளராஷ்டிரர்
சூரியனை
வணங்குவோர் என்றும்
பொருள்படும்.
ஸ்ரீகிருஷ்ணனும்
சூரியனை வழிபடும்
மரபினர்
என்பது இங்கு நினைவு
கூரத்தக்கது.
கோத்திரமும்
குடும்பப்
பெயர்களும்
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிரர்களின்
கோத்திரங்களும்
குடும்பப் பெயர்களும்
சௌராட்டிரர்களின்
சமுதாயம், பண்டைய
வேதகால 64 ரிசிகளின்
பெயர்களில்
கோத்திரங்களாகப்
பிரிந்து உள்ளனர்.
ஒரே கோத்திரத்தில்
திருமண உறவு வைத்துக்
கொள்வதில்லை. இவர்கள்
யசூர் வேதம், ஆபஸ்தம்ப
சூத்திரத்தின்படி
அனைத்துச் சடங்குகள்
இச்சமூகப் புரோகிதர்கள்
செய்கின்றனர்.
ஒரு கோத்திரத்தில் பல
குடும்பப் பெயர்கள்
கொண்டுள்ளது.
பெரும்பாலான குடும்பப்
பெயர்கள், காரணப்
பெயர்களாலும் பட்டப்
பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.
மொழி
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிர மொழி
இவர்கள் பேசும் மொழி,
சமஸ்கிருதத்தின்
பேச்சு மொழியான
பிராகிருதம் என்ற
குடும்ப
மொழியிலிருந்து பிரிந்த
கிளை மொழியான
’சௌரஸேனி’
மொழியாகும். இந்த
‘சௌரஸெனி’ மொழியைத்
தான் சௌராட்டிரர்கள்
தேசத்தில்
இருந்தபோது பேசினர்.
இந்த மொழி குறித்து 1861
மற்றும் 1907 ஆகிய
ஆண்டுகளில் டாக்டர்.
ராண்டேல் மற்றும்
ராபர்ட் கால்டுவெல்
ஆகியவர்கள்
ஆய்வு செய்து,
தமிழ்நாட்டு
சௌராட்டிரர்கள் பேசும்
மொழி ‘சௌரஸேனி”
என்று உறுதிப்
படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் மேற்குப்
பகுதியில் புழக்கத்தில்
இருந்த பிராகிருத
மொழியிலிருந்து
வளர்ந்தவைகள்தான்,
”சௌராஷ்ட்ரீ’, ’அவதி’,
மற்றும் ’மஹராஷ்ட்ரீ’
மொழிகள். ’சௌரஸேனி’
மொழியிலிருந்து
வளர்ந்தவைகள் தான்.
இன்றைய குஜராத்தி
மற்றும் இராஜஸ்தானி
மொழிகள்” என்று
கலைக்களஞ்சியம்
(பகுதி 7. பக்கம் 301)
கூறுகிறது.
தமிழ்நாட்டில் வாழும்
சௌராட்டிரர்கள் பேசும்
மொழியை சௌராஷ்ட்ரம்
என்று அழைக்கிறது.
இவர்கள் பயன்படுத்தும்
சௌராஷ்டிர
மொழி எழுத்து
வடிவத்தை மதுரை
போராசிரியர் தொ.மு.
இராமராய் (1852-1913) என்ற
சௌராட்டிர
மொழி அறிஞர், வட
மொழி பேராசிரியரான
சதுர்வேதி
இலக்குமணாச்சாரியர்
என்பவரின் உதவியுடன்,
சௌராட்டிர
மொழி எழுத்துக்களை
சீர்திருத்தி, புதிய
வடிவில்
சௌராஷ்டிரா மொழியில்
பல பாடநூல்கள்
அச்சிட்டு
வெளிட்டுள்ளார்.
இம்மொழிக்கான
இலக்கணத்தை மதுரை,
தொ. மு. இராமராய்
மற்றும் சேலம், புட்டா.
ந. அழகரய்யர் ஆகியவர்கள்
செம்மைப்படுத்தி புதிய
இலக்கண நூல்கள்
அச்சிட்டு வெளியிட்டனர்
.
பல்துறையில் புகழ்
பெற்றவர்கள்
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிர சமூகத்தவர்
பட்டியல்
வேங்கடரமண பாகவதர்
வேங்கட
சூரி சுவாமிகள்
நடனகோபால
நாயகி சுவாமிகள்
கே.வி. இராமாச்சாரி
எல்.கே. துளசிராம்
என்.எம்.ஆர். சுப்பராமன்
என்.எம்.ஆர்.
கிருட்டிணமூர்த்தி
பி.எஸ்.ஏ.
கிருட்டிணய்யர்
எம்.வி. வெங்கட்ராம்
சி.எஸ். இராமாச்சாரி
கே. எல். என்.
கிருஷ்ணன்
கே.எல்.என். ஜானகிராம்
என்.எம்.ஆர்.
கிருட்டிணமூர்த்தி
பி.எஸ்.ஏ.
கிருட்டிணய்யர்
எம்.வி. வெங்கட்ராம்
கசின் ஆனந்தம்
கே.ஆர். சேதுராமன்
பி.வி. நரசிம்ம பாரதி
பத்மஸ்ரீ. டி.எம்.
சௌந்தரராஜன்
எம்.என். ராஜம்
ஏ.எல். ராகவன்
லீலாவதி
ஆரியங்காவு கோயில்
முதன்மைக் கட்டுரை:
ஆரியங்காவு ஐயப்பன்
கோவில்
கேரளாவிலுள்ள
ஆரியங்காவு ஐயப்பன்
கோவில் கோயிலில்
மார்கழி மாதத்
திருவிழாவின்
போது சௌராட்டிர
சமூகத்தினருக்கு தனி
மரியாதை
அளிக்கப்படுகிறது.
அதாவது இங்குள்ள
தர்மசாஸ்தாவிற்கு
சௌராட்டிரப்
பெண்ணை திருமணம்
முடிக்கும் நிகழ்வாக
ஒரு விழா உள்ளது.
இதன்படி "ஆரியங்காவு
தேவஸ்தான சௌராட்டிர
மகாஜன சங்கத்தினர்"
இங்கு பெண் வீட்டார்
என்கிற முறையில்
திருமணத்திற்கு
வேண்டிய
பொருட்களோடு வந்து
ஓரிடத்தில்
தங்கி திருமண
ஏற்பாடுகளைச்
செய்கிறார்கள்.
பிள்ளை வீட்டார் செய்ய
வேண்டிய
மரியாதைகளை மறக்காமல்
, முதல் நாள் பாண்டிய
அரசன்
பணமுடிப்பு அளிக்கும்
சடங்கையும்
தேவஸ்தானத்தார்
நிறைவேற்றி
வைக்கின்றனர்.
அன்று சௌராட்டிரர்கள்
குடும்பத்தோடு
மணப்பெண்ணைத்
திருமணத்திற்கு
அழைத்து வரும்
பாவனையில்
அருகிலுள்ள மாம்பழத்
துறைக்குச்
சென்று அங்குள்ள
பகவதியையும்
வணங்கி வருகின்றனர்."

No comments:

Post a Comment