Friday 26 September 2014

சொந்த வீடு கட்டுவோர்க்கு பில்டர்ஸ்லைன்ஸ் இதழின் 50 முக்கிய யோசனைகள்

COPIED FROM GEETHAPPRIYAN
பணம் ,நேரம்,பொருள் மிச்சம் செய்யும் RAT TRAP BOND கட்டுமானத்தின் தோற்றம்


* வீடு கட்டும்போது தண்ணீர், அஸ்திவாரம், சிமெண்ட், செங்கல், ஃப்ளோர், பெயிண்ட் என வீட்டின் ஒவ்வொரு கட்டுமான அம்சத்திலும் நம் ஆலோசனை மற்றும் கண்காணிப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்வது, வீட்டின் குவாலிட்டியைக் கூட்டும்.
தண்ணீர் :
* தண்ணீரின் தரம் மிக முக்கியம். அதிக உப்பு உள்ள தண்ணீரில் வீடு கட்டினால், கட்டுமானம் மெள்ள மெள்ள அரி
மானத்துக்கு உள்ளாகும். அதற்காக குடிநீரில் வீடு கட்ட வேண்டும் என்றில்லை. அதிகம் உப்பில்லாமல் இருப்பது அவசியம்.
* தண்ணீர் தேவைகளுக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார்களைத் தேர்ந்தெடுக்கும்போது சில விக்ஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். தண்ணீர் கொஞ்சம் கூட உட்புக வாய்ப்பில்லாத மோட்டார் பம்புகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் மின்கசிவால் பிரச்சனை இருக்காது.
* இப்போதெல்லாம் அதிகபடியான வெப்பத்தைத் தாக்குப் பிடிக்கும் மோட்டார்கள் மார்க்கெட்டில் உள்ளன. வெப்பம்
அதிகமாகிவிட்டது என்பதை உணர்த்தும் அலாரம் பொருத்தப்பட்ட மோட்டார்களைப் பொருத்திவிட்டால் அடிக்கடி ரிப்பேர் ஆவது தடுக்கப்படும்.
* வெப்பத்தை உணர்ந்து மின் இணைப்பை தானே துண்டித்து விடும் வகையிலான ஏற்பாடுடைய மோட்டார்களைப் பொருத்துவது புத்திசாலித்தனம்.
சிமெண்ட்
* தரமான சிமெண்ட்டால்தான் வலுவான கட்டடத்தை உறுதி செய்ய முடியும். அந்தத் தரத்தை சிமெண்டின் நிறத்தைப் பார்த்தே ஓரளவு யூகித்துவிட முடியும். லேசான பசுமை நிறத்தில் இருப்பது நல்ல சிமெண்ட்.
* மூட்டைக்குள் இருக்கும் சிமெண்ட்டுக்குள் கையை விடும்போது சிலுசிலுவென்று குளுமையாக இருக்க வேண்டும். தண்ணீர் இருக்கும் வாளிக்குள் சிமெண்ட்டைப் போடும்போது அது மிதந்தால் தரத்தில் கோளாறானது என்று அர்த்தம். அதேபோல் தட்டி இருந்தாலும் தரமற்றது.
* சிமெண்ட் மூட்டையின் அளவு 50 கிலோ இருக்க வேண்டும். எடை வேறுபாடு ஒரு கிலோ வரை அனுமதிக்கலாம். அதற்கு மேல் போனால், உரிய வகையில் விசாரித்து ஒழுங்கான அளவுள்ள மூட்டைகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்குங்கள்.
மணல் :
* மணலில் அதிக தூசு துரும்பு இல்லாமல் இருக்க வேண்டும். அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்துவிடும்.
* மணலின் மொத்த எடையில் 8% வண்டல் இருந்தால் பயன்படுத்தலாம். பார்வையாலேயே இதைக் கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு மேல் இருந்தால் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* கடல் மணலைக் கொடுத்து ஏமாற்றும் வேலைகள் நடக்கின்றன. அந்த மணலைக் கொஞ்சம் வாயில் எடுத்துப் போட, உப்புக் கரித்தால் அது கடல் மணல். இந்த மணலை பயன்படுத்திக் கட்டப்படும் சுவர்கள் பெரும்பாலும் ஈரமாகவே இருக்கும். சீக்கிரம் உதிர்ந்துவிடும். மழை பெய்தால் சீக்கிரம் அரித்து விடும். ஆகையால். கடல் மணலுக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிடுங்கள்.
* மணலில் தவிடு போல் நொறுங்கிப் போகக்கூடிய சிலிக்கா
அதிகம் இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், இது சிமென்ட்டுடனான பிணைப்பை உறுதியாக உருவாக்காது.
இரும்புக் கம்பிகள் :
கான்கிரீட்டுக்கு வலு சேர்க்க இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு எந்த வகை இரும்புகளைப் பயன்படுத்தினாலும் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
* ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் கம்பிகள், பட்டைகள், சட்டங்கள், சுருள்கள் போன்றவற்றில் சிறு பிசிறுகள் இருக்கக்கூடும். இவற்றை அகற்றிய பின்னரே பயன்படுத்த வேண்டும்.
* இரும்பின் மேல் கொஞ்சம் கூட துரு இருக்கக் கூடாது. அடையாளங்களுக்காக சிறு அளவில் பெயிண்ட் தடவப்பட்டாலும் நீக்கிவிட வேண்டும். எண்ணெய், அழுக்கு, பிசுக்கு, சேறு, மண், மணல் போன்ற எந்த வித அசுத்தமும் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிணைப்பு வலுவில்லாமல் போய்விடக் கூடும்.
செங்கல் :
* வீட்டின் உறுதியை நிர்ணயிப்பதில் செங்கற்களுக்கு பிரதான இடம் உண்டு. பாரம்பரிய முறையிலான சூளை மற்றும் நவீன முறையிலான சேம்பர் என இரண்டு வகையில் செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. இரண்டு தயாரிப்புகளையுமே வாங்கிப் பயன்படுத்தலாம்.
* செங்கல் தரமானதாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய நாலைந்து செங்கற்களை எடுத்து 24 மணி நேரம் நீரில் ஊறப்போட வேண்டும். பிறகு, விரலால் சுரண்டிப் பாருங்கள் பிசிறு பிசிறாக வந்தால் தரம் குறைவான செங்கல் என்று அர்த்தம்.
* இப்போதெல்லாம் ‘இன்டர்லாக் செங்கல்கள்’ என்றொரு வகையும் பயன்பாட்டில் இருக்கிறது. நிலக்கரி சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம் கலந்து தயாரிக்கப்படும் இந்தக் கல் ஒன்றின் விலை 16 முதல் 20 ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தக் கல், மூன்று செங்கற்களுக்கு இணையானது. வேலையைச் சுலபமாக்கும்.
* கட்டுமானப் பொருட்களின் சேதாரத்தை குறையுங்கள். கொண்டு வரும்போதோ, கையாளும்போதோ, பயன்படுத்தும்போதோ ஆகும் சேதாரத்தில் மட்டும் 5 சதவீத கட்டுமானப் பொருட்கள் வீணாகிவிடும். நீங்கள் களத்தில் இருந்தால்தான் இந்த சேதாரத்தை கண்காணிக்க முடியும். அலுவலகத்திற்கு விடுமுறை போட்டால் லாஸ் ஆஃப் பே ஆயிற்றே என நீங்கள் கணக்குப் போட்டால் இங்கு அதைவிட அதிக அளவு பொருட்கள் நட்டமாகும்.
* கான்ட்ராக்டரிடம் வேலையை ஒப்படைக்கும் போது அவரது முந்தைய வேலைகள், அவருக்கும், அவரது தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள நல்லுறவு, அவரது வளைந்து கொடுக்கும் தன்மை, எல்லாவற்றையும் விட நேர்மை ஆகியவற்றை விசாரியுங்கள்.
* மூலப் பொருட்களை ஒரேயடியாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது தவறு. கட்டுநர்களுக்கு இது சரியானது. ஆனால், முன்கூட்டியே ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பொருட்களை வாங்குவதன் மூலம் நமது பணம் மறைமுகமாக ஒரே இடத்தில் முடக்கப்படுகிறது.
* அதே சமயம் அவ்வப்போது பொருட்களை வாங்கினால், அன்றன்றைய சந்தை நிலவரம் பொறுத்துதான் நாம் பொருட்களை வாங்க முடியும். இதற்கு என்ன வழி? முன்கூட்டியே, பின் தேதியிட்ட காசோலைகளை டீலர்களிடம் கொடுத்துவிட்டு, அந்தந்த தேதியில்தேவையான பொருட்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு இறக்கும்படி ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.
* சமீபத்திய தொழிற்நுட்பங்களையும், நவீன கட்டுமானப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் நேரமும் கூலியும் மிச்சமாகும்.
* செங்கற்களுக்கு மாற்றாக வந்துள்ள கட்டுமானக் கற்களை பயன்படுத்தலாம். இது விலையும் குறைவு, சேதாரமும் குறைவாகும்.
* மர வேலைகள் நமது கட்டுமானச் செலவை பெரிதும் கபளீகரம் செய்யக்கூடியவை. எங்கள் வீட்டு வாசற்கதவு மட்டுமே 1 லட்ச ரூபாய் ஆனது என எத்தனை நாள் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?. குறைந்தபட்சம் கிரகப்பிரவேச நாளில் இருந்து 10 நாட்கள் சொல்லப் போகிறீர்கள். அதற்கு ஏன் 1 லட்ச ரூபாய் ஃபீஸ் தரவேண்டும்?.
* எல்லா வேலைகளுக்கும் மரத்தையே நாடாமல், UPVC மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளைப் பயன்படுத்துங்கள். மர லுக்கினைத் தரும் ஸ்டீல் கதவுகளைக் கூட நாம் பயன்படுத்தலாம்.
* பரண் அமையும் இடத்தில் அதனுடைய தொடர்ச்சியாக சுவற்றின் வெளிப்புறத்தில் சன்க்ஷேடுகளை அமைத்தால் செலவு குறையும்.
* ஆற்று மணலை வெளியில் ஒரு வார காலம் போட்டு வைத்து, பின்பு அதனை கசடுகள் நீக்கி, சலித்து பயன்படுத்துவதற்கு பதில், நன்றாக பேக் செய்யப்பட்ட M.சேண்டை பூச்சு வேலைக்குப் பயன்படுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு ஆற்று மணலைவிட M.சேண்ட் விலைகுறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
* க்ஷட்டரிங் பிளைவுட் கொண்டு சென்ட்ரிங் செய்யும் பட்சத்தில், சீலிங் பூச்சு வேலை முற்றிலும் தவிர்க்கலாம். இதன் மூலம் 1000 சதுர அடி கட்டிடத்தில் ரூ.30,000 வரை மிச்சப்படுத்தலாம்.
* எந்த வேலைக்கு, எந்த அளவிலான கம்பி என்பதை பொஷூயாளர் மூலமாக பார் பென்டருக்கு உணர்த்திவிடுங்கள். பொதுவாக அஸ்திவாரம், பில்லர்கள், தளங்கள் இந்த வேலைகளின் போதுதான் பொறியாளர்களின் பேச்சை பார்பென்டர்கள் கேட்கிறார்கள். ஸ்லாபு போன்ற மற்ற வேலைகளுக்கு அதிக அளவில் கம்பிகள் செலவாவதை நாம் தடுக்க வேண்டும்.
* முடிந்த அளவு மறுசுழற்சிப் பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். பழைய பொருட்களாயிற்றே என்ற தயக்கத்தை நீங்கள் களைந்தால், கணிசமான அளவு பணத்தை மிச்சம் செய்யலாம்.
* உங்களது புராஜெக்டு நடத்தும் இடத்தைச் சுற்றி வலுவான காவலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நிலையில் கட்டுமானப் பொருட்களைவிட காஸ்ட்லியானது எதுவுமில்லை.
* தேவையற்ற பார்ட்டீசியன் சுவர்களுக்கு அதிக கனமுடைய சுவர்களை அமைக்காதீர்கள்.
* கட்டுமானப்பணி முடியும் வரை, செங்கல், சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கட்டுமானப் பொருட்களை கவனமாகக் கையாளுங்கள்.
* செலவானாலும் பரவாயில்லை என்று தரமிக்க மின் கேபிள்கள், மின் சாதனங்களையே வாங்குங்கள். இது ஒன்டைம் இன்வெஸ்ட்மென்ட்தான். இதற்குப் பிறகு ஆகும் மின் செலவை இது பெருமளவு குறைக்கும்.
* நான் பிராண்டட் பெயிண்ட்களை உங்கள் கட்டுமானத்
திற்குப் பயன்படுத்தாதீர்கள். தரமற்ற பெயிண்ட்கள் உங்கள் பர்ஸை சிக்கனப்படுத்தும். ஆனால், கட்டிடத்தை நீண்டகாலம் பாதுகாக்காது.
* வீட்டை சுற்றிலும் முறைப்படி அளந்து, எல்லைகளை கவன
மாக வேலியிட்டு பாதுகாத்துக் கொள்வது சிறந்தது.
* சிமெண்ட் கட்டிட சாமான்கள், கருவிகள் இவற்றை பாதுகாக்க ஒரு சிறிய குடோன் அமைப்பது நல்லது.
* கட்டுமான பணிக்காக முதலில் குடிநீர் தொட்டி கட்டிக் கொள்வது நல்லது அல்லது செப்டிக் டேங்க் கட்டி, கட்டிட வேலைக்கான நீர் தொட்டியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
* போர்வெல் போட்டு, மின் இணைப்பு பெற்ற பிறகு, கட்டிட வேலையை துவங்குவது வரவேற்கத்தக்கதாகும்.
* அதி நவீன கட்டுமான நுட்பங்கள், பொருட்களை பயன்படுத்திக் கொள்ளுதல், மிக பிரபலமாகி வரும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்டுகள் போன்ற அதிநவீன கட்டுமான வசதிகளை பயன்படுத்திக் கொண்டால் கட்டுமான காலம், நேரம் குறையும்.
* அஸ்திவாரம் போட மண்வெட்டி எடுத்த உடனே மண்ணின் தன்மை தரம் பற்றி பரிசோதித்து இந்த இடத்திற்கு ஏற்ற அஸ்திவார முறையை பொறியாளர் அறிவுரையுடன் முடிவு செய்ய வேண்டும்.
* பேஸ்மெண்ட் லெவல் கட்டி முடித்த பிறகு சாலையின் உயரத்திற்கும், வீட்டின் உயரத்திற்கும் பொருத்தமான அளவில் கட்டிடத்தை உயர்த்த வேண்டும்.
* லிண்டல் லெவல் வந்த பிறகு, போர்ட்டிகோ. சிட் அவுட், சன்க்ஷேஷட் பொருட்கள் வைக்க, சுவரின் பக்கவாட்டில் உயரத்தில் லக்கேஜ் லாஃப்ட், சுவற்றிற்குள் வைக்கக்கூடிய ஒயர்களுக்கு இட அமைப்பு பற்றி பொறியாளருடன் ஓர் ஆய்வு செய்ய வேண்டும்.
கீழ்க்கண்ட விவரங்களை தெரிந்து கொள்ளல் அவசியம் :
* ரூஃப் லெவல் முடிந்த பிறகு எலெக்ட்ரிக் ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் கண்ட்ரோல் பேனலுக்கு இடம் குறித்து ஆய்வு எதிர்காலத்தில் கூடுதலாக மின்வசதி தேவைப்பட்டால் அதற்கான ஸ்விட்ச் பாக்ஸ் அமைவிடங்கள் பற்றிய விவரங்கள்.
* கதவு, நிலவு, ஜன்னல்கள் ஆகியவற்றிற்குத் தேவையான மரங்கள் அலுமினிய ஸ்டீல் கிரில்கள், ஃபர்னிச்சர் ஃபிட்டிங்ஸ், பூட்டுகள், கைப்பிடிகள், அலமாரிகள், ரூம் தடுப்புகள், வெண்ட்டிலேட்டர் அமைப்புகள், உள் அலங்கார பொருட்களுக்கான அமைவிடங்கள் பற்றிய அனைத்து விவரங்கள்.
* தளத்திற்கு மொசைக் மார்பிள்ஸ், செராமிக் டைல்ஸ், சுவரில் பதிக்கும் டைல்ஸ், அலங்காரக் கூரை, ஓடுகள், பளபளக்கும் சமைலயறைப் பலகைகள், ஸ்டோர் ரேக்ஸ் பலகைகள் பற்றிய விவரங்கள்.
* வண்ணப்பூச்சு உட்புறத்துக்கு ஏற்ற வண்ணம், வெளிச்சுவர்களுக்குரிய வண்ணம் கேட் டிசைனில் இருக்க வேண்டும். என்ன வண்ணம் அடிக்கலாம் என்பதைப் பற்ஷூய விவரங்கள்.
* உள் அலங்கார அறையின் உள் அலங்கார அமைப்பிலும் அந்த அறையின் தன்மைக்கேற்ப வண்ணமும், உள் அலங்காரமும் இருப்பது பற்றிய விபரங்கள்

வீடு கட்டும் முன் ..
முக்கியத்துவமான டிப்ஸ்கள்
-----------------------------------------------------------
மனையை சீரமைத்தல், மரம் செடி கொடிகளை நடுதல், மண் பரிசோதனை, குடிநீர் பரிசோதனை மேற்கொள்ளுதல், அஸ்திவாரப் பணிகளின்போது கரையான் மற்றும் பலவித பூச்சிகளை ஒழிக்க வல்ல பெஸ்ட் கன்ட்ரோல் என்கிற பூச்சி தடுப்பு முறையை மேற்கொள்ளுதல் ஆகியனவற்றை வீடு கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய முதற்கட்டப் பணிகள் என வகைப்படுத்துகிறார்கள் கட்டிட வல்லுனர்கள். அது குறித்த ஆலோசனைகள் இதோ:
* நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள நிலத்தில் உள்ள மண் எத்தகைய தன்மைகொண்டது? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்மேல் கட்டப்படும் கட்டடத்தைத் தாங்கக் கூடிய சக்தி அதற்கு இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.
* தரை மட்டத்திற்குக் கீழ் உள்ள மண் அடுக்குகளின் அமைப்பு எத்தகையதாக இருக்கிறது? பளுவைத் தாங்குமா? உள்ளுக்குள் அமிழ்ந்து போக வைக்குமா? உறுதி எப்படி? பாறைகள் நிறைந்திருக்குமா? தண்ணீர் தேங்குமா? களிப்பாகித் தொல்லை தருமா? நீரை உறிஞ்சுமா? தேக்கி வைக்குமா? தரைக்குள் நீர் உள்ளே நுழைய அனுமதிக்குமா? உள்ளே நுழையும் நீர் தங்கி இருக்குமா?
வடிகால் வசதி எப்படி? வெறும்கால்களால் நடந்து போக ஏற்றதா? மேற்பரப்பில் காணப்படுவதைப்போலவே எவ்வளவு ஆழத்திற்கு அதே மண் இருக்கும்? என்பதையெல்லாம் நன்கு ஆராய வேண்டும்.
* மேலும், இந்தப் பகுதியில் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைக்க வசதிப்படுமா?ஆழ்துளைக் கிணறுதான் பொருத்தமாக இருக்குமா? எவ்வளவு ஆழத்தில் நீர் கிடைக்கும்? மண்ணின் வகை என்ன? வண்டலா? களிமண்ணா? குறுமண்ணா? மணலா? சவுடா?மண்ணுக்குள் நச்சுத் தன்மை கொண்ட ஊடுருவல் நடந்திருக்கிறதா? அதைத் தடுக்க முடியுமா? நச்சுத் தன்மை கொண்ட மண்ணை மாற்றி அமைக்க வழி இருக்கிறதா?கறையான் முதலிய தொந்தரவுகள் வராமல் இருக்குமா? புற்று வளருமா? மரம், செடி கொடிகளை வளர்க்க ஏற்றதா? வீட்டுத் தோட்டம் பலன் தருமா?கட்டுமானத்தை உறுதியாக்குவதற்குச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளுக்கு அதிகம் செலவு வைக்குமா? கட்டி முடித்த பின் கழிவு நீர் வெளியேற்றத்திற்கு உதவுமா? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
* தரையின் உறிஞ்சும் தன்மை எப்படி?தரைப் பரப்பை மூட வேண்டியது அவசியமா? அப்படியே விட்டுவைக்க ஏற்றதா? கான்கிரீட், ஓடு, கல் பாவ வேண்டுமா? அதற்கு அதிகம் செலவு வைக்குமா?கன ரக இயந்திரங்களைக் கொண்டு வந்து இயக்க வசதிப்படுமா? இயந்திரங்களுக்கான தாங்கிகளை அமைக்க இடம் கொடுக்குமா? முளைகளை அடித்து இறக்குவதற்கு ஏற்ற இறுக்கம் கிடைக்குமா? என்பதையும் நன்கு சோதித்து அறியுங்கள்.
* ஆரம்ப கட்ட மண் பரிசோதனை முயற்சிகளுக்குச் சங்கடப்பட்டுக்கொண்டு விட்டுவிடாதீர்கள். சில ஆயிரம் செலவழித்து மண் பரிசோதனை மேற்கொண்டால் அதுதான் உங்கள் கனவு வீட்டின் உண்மையான அஸ்திவாரம்.
மீஅதே போன்று நிலத்தடி நீர் பரிசோதனையும் மேற்கொள்ளத் தவறாதீர்கள். நிலத்தடி நீர் நன்றாக அமைந்துவிட்டால் உங்கள் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான தண்ணீரை வெளியிலிருந்து வாங்க வேண்டியதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
* பெஸ்ட் கன்ட்ரோல் தரமாக அமையும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அஸ்திவாரப் பணிகளுக்கு முன்பும், பின்பும் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வகையான பெஸ்ட் கன்ட்ரோல் முறைகளைப்பற்றி நிபுணர்களிடம் கேட்டறிந்து செயல்படுத்துங்கள்.

 - FROM BUILDERS LINE
For subscribe pl call : 88254 79234



முக்கிய குறிப்பு:-

பணம் ,நேரம்,கட்டுமானப்பொருள் மிச்சம் செய்யும் RAT TRAP BOND கட்டுமானம் மற்றும் இதர வழிமுறைகளைப் பற்றிய மேலதிக தகவல்களைறிய

http://www.youtube.com/watch?v=leOV5ldCyng

http://gshakya-exploration.blogspot.ae/2012/09/cost-energy-efficient-building.html

http://www.earth-auroville.com/


Monday 1 September 2014

ரத்த குழாய் அடைப்பு

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.
நீங்கள் குணமடைவீர்கள்!
தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.
தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.
மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.
நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.
ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.
இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.
இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.
மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
- ஸ்ரீ சமஸ்கிருத ஆயுர்வேத சர்வதேச ஆய்வு இதழ்

Tech

BLOGGER நண்பன் 


ப்ளாக்கர் பாஸ்வோர்ட் மறந்துவிட்டதா?

பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி 


=========================================================================

தெரிந்துகொள்ளலாம் வாங்க :


ரூ.5,301 விலையில் மைக்ரோமேக்ஸ் போல்ட் ஏ 069 மொபைல் போன்


*******************************************************************************
புதுமை தகவல் :
நண்பர் MSM நசீம்அவர்களின் வலைதளம் இது . தகவல்தொழில்நுட்ப உலகில் நடக்கும் தவறுகளை எப்படி எதிர்கொள்ளவது என அருமையான கட்டுரை எழுதியுள்ளார். அதுபோல நமது தளத்துக்கு தேவையான  தலைப்பு படங்களை எப்படி ONLINE இல் எப்படி செய்வது என அழகாக பதிவுட்டுள்ளார் .

இவரின் சில பதிவுகள் ..

  Windows xp யில் உள்ள வசதியினை windows 7இல் கொண்டு வர

from
valaisaram

Sunday 3 August 2014

ரெயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் உறுதி ஆகுமா? பதில் சொல்லும் இணையதளம்

 உங்கள் ரெயில் பயண டிக்கெட்டுக்கான பி.என்.ஆர் எண்ணை இந்த தளத்தில் சமர்பித்தால் அந்த டிக்கெட் உறுதியாவதற்கு எந்த அளவு வாய்ப்புள்ளது என இந்த தளம் கணக்கு போட்டு சொல்கிறது.
சரி, இந்த கணிப்புகள் எந்த அளவு சரியானவை. பொதுவாக எல்லா கணிப்புகளும் எந்த அளவு சரியானவையோ அதே அளவு இதுவும் நம்பகமானது என இந்த தளம் சொல்கிறது. அது மட்டும் அல்ல, கிட்டத்தட்ட ஒரு லட்சம் முறைக்கு மேல் பரிசோதித்து பார்த்து சேவையை அறிமுகம் செய்திருப்பதால் இந்த கணிப்பு நம்பகமானவை என்றும் உறுதி அளிக்கிறது.
கணிப்பு 65 சதவீத்திற்கு மேல் இருந்தால் டிக்கெட் உறுதி ஆகலாம். கணிப்பு சதவீத்தில் குறிப்பிடப்படுவதோடு வண்ணங்களிலும் காட்ட்ப்படுகிறது.பச்சை வண்ணம் என்றால் ஒ.கே.
இது தவிர ரெயில்களை அறியும் வழக்கமான வசதியும் இருக்கிறது. ரெயில் பயண அடிப்படை தகவல்கள் மற்றும் காத்திருப்பு பட்டியல் செயல்படும் விதம் பற்றிய விளக்க குறிப்புகள் அவசியம் படிக்க வேண்டியவை.
எளிமையான சேவை தான்.

-இணையதள முகவரி; http://www.trainman.in/

from

cyberimman,wordpress.com

Friday 6 June 2014

இந்தியன் ரயில்வே - ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ்


Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=780804311937966&set=a.105529529465451.10294.100000252143571&type=1

இந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவல...ப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக - இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம்.

March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of 1 Million to 8 Million in REAL TIME and LIGHT VERSION Launched

முதன் முதல் உங்க்ள் பிரவுசரின் அத்தனை கேஷ் / குக்கிஸை கிளியர் செய்யவும். AVOID Internet Ecplorer

இரண்டாவது உங்கள் பிரவுசர் இந்திய நேரம் அதுவும் ஐ ஆர் சி டி சி சர்வர் நேரத்துடன் ஒத்து போக வேண்டும். இதன் மூலம் புக்கிங் அனேகமாய் ஒகே - ஏன் என்றால் வெளி நாட்டிலிருந்து புக்கிங் செய்யும் போது ரிலே டோக்கன் எனப்படும் சர்வர் டிலே - மற்றூம் ஆக்டிவ் ரவுட்டிங் வழி என நினைத்து உங்களுக்கு காலம் தாழ்த்தும். ஐ ஆர் சி டி சி சர்வர் டைமை மேட்ச் செய்ய இந்த லின்க்கை அழுத்தவும். http://www.indianrail.gov.in/train_Schedule.html ஏதாவது ஒரு ரயில் நம்பரை போடவும் உடனே அந்த ரயில் டீட்டெயில் மற்றூம் கீழே இன்றைய தேதி மற்றூம் ஐ ஆர் சி டி சி ரயில்வே சர்வரின் நேரம் - மிக துள்ளிய்மாக காட்டும் அதற்க்கு ஏற்றார் போல் செட் செய்துக்கோங்க - மூணு நிமிஷம் அப் / ட்வுன் ஒகே -

மூன்றாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர் யூஸ் ப்ண்ணீனா இந்த டூலை டவுன்லோட் செய்தா அதுவே டைம் சின்க் செய்யும் - http://userscripts.org/scripts/show/109376 - இது குரோம் பிரவுசருக்கு வேலை செய்யும்.

நாலாவது செஷன் எக்ஸ்பயரி தான் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு கடைசியா எக்ஸ்பயரி ஆகி லாகின் திரும்பவும் செய்ய சொல்லும் இது தான் உச்சகட்ட கொடுமை - இதற்க்கு இரண்டு வழிகள் - ஒன்று - உங்க செஷன் ஐடியை பிரவுசரில் இருந்து எடுத்து கொள்ளுங்கள் - இந்த லின்க்கை உபயோகபடுத்தி https://www.irctc.co.in/cgi-bin/bv60.dll/irctc/booking/planner.do?screen=fromlogin&BV_SessionID=%40%40%40%400958659016.1349272417%40%40%40%40&BV_EngineID=ccfladfhmfdefklcefecehidfgmdfkm.0 - இன்னொரு பிரவுசர் - அதாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் யூஸ் பண்ணினா = குரோமில் இதை போட்டு செஷன் ஐடியை மாற்றீ அப்படியே சர்வுருக்குள் குடியிருந்த கோயில் மாதிரி ஒட்டிக்கலாம். மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி பண்ணி கொண்டே இருங்கள் லாக் அவுட் ஆகவே ஆகாது. இரண்டாவது மேஜிக் ஆட்டோஃபில் எனப்படும் நிலைத்தகவலை அப்படியே சர்வருக்குள் போட இந்த டூலை பயன்படுத்தினால் எல்லா டீட்டெயிலும் போட தேவையில்லை அதற்க்கான லின்க் - http://ctrlq.org/irctc/ - ஃபயர் ஃபாக்ஸ் / குரோமுக்கு ஆல் ஒகெ ஒகெ - இதன் மூலம் 80% கண்டிப்பாய் டிக்கட் கிடைக்க வாய்ப்புண்டு.

ஐந்தாவது கடைசியாக - தட்கல் டிக்கட் நேரமான 10 - 12 மணி நேராத்தில் இன்னொரு புது சர்வரை ஐ ஆர் சி டி சி மார்ச் மாதம் 10 கோடிக்கு வாங்கி இன்ஸ்டால் செய்திருக்கிறது இதன் மூலம் உங்கள் டிக்கட்டை லைட் வெர்ஷன் என்னும் அறிவிப்பு 9.30 முதல் 12 மணி வ்ரை வருகிறதா என்று பாருங்கள் வர வில்லை என்றால் ரெஃபர்ஷ் செய்து பின்பு ஆரம்பிக்கவும் இதன் மூலம் 10 லட்சம் கப்பாசிட்டி 80 லட்சம் ஆகி 60 - 65,000 டிக்கட்கள் எளிதாக செய்ய முடியும் வித் அவுட் நோ பிராப்ளம்ஸ். இந்த நேரத்தில் விளம்பரம் / டூர் பேக்கேஜ் லொட்டு லொசுக்கு எதுவுமே வேலை செய்யாததால் இதன் டிராஃபிக் ஸ்மூத்தாய் இருக்கும் ஆல் தி பெஸ்ட் மக்களே...

உங்கள் ஜன்ம நட்சத்திரத்து​க்குரிய சைவத் திருமுறைப் பாடல்!!!


தினமும் கணபதித் துதியை ஒருமுறைப் பாடிவிட்டு,உங்களுக்குரிய நட்சத்திரத் திருமுறையைப் பாடிவர,சிவனருள் கிட்டும்;
விநாயகருக்குரிய திருமுறை:பாடியவர்:-சம்பந்தர்
பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
அசுபதிக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
தக்கார்வம் எய்திச் சமண் தவிர்ந்து
உன் தன் சரண் புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன் திறம்
அல்லால் எனக்குளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிகவட மேரு என்னும்
திக்கா திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.
பரணிக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதி யானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்போடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவி யானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்த வாறே.
கார்த்திகைக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு
மலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையிலாத
காஞ்சிமா நகர்தன் னுள்ளார்
எல்லியை விளங்க நின்றார்
இலங்குமேற் றளிய னாரே.
ரோகிணிக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனைநினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனையாளும்
கங்கா நாயகனே! கழிப்பாவை மேயோனே!
மிருகசீரிடத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
திருவாதிரைக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடிதொழுவார்
அவ்வத்திசைக்கு அரசு ஆகுவர் அலரான் பிரியாளே.
புனர்பூசத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின தூக்கமலத்து
அன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுதரும்பி
இன்னல் களைவன இன்னம்ப ரான் தன் இணை அடியே.
பூசத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
பொருவிடை ஒன்று உடைப் புண்ணியமூர்த்திப் புலியதளன்
உருவுடை அம்மலை மங்கை மணாளன் உலகுக்கெல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்றுஇனிக் காண்பதென்னே.
ஆயில்யத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்யவல்லானைச் செந் தீமுழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச்சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
மகத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
பொடியார் மேனியனே புரிநூல் ஒரு பாற் பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என் அமுதே எனக்கு ஆர்துணை நீயலதே.
பூரத்துக்குரிய திருமுறை:பாடியவர்:ஞானசம்பந்தர்
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
உத்திரத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
போழும் மதியும் புனைக்கொன்றை புனல்சேர் சென்னிப்புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழும் திரைக்கா விரிக்கோட்டத்து ஐயாறு உடைய அடிகளே.
அஸ்தத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதி சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செய்யாயே.
சித்திரைக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடற்கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
சுவாதிக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
காவிளை யிட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித் தீர் என்று இரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுது நாம டியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீல கண்டம்.
விசாகத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம்தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
அனுஷத்துக்குரிய திருமுறை:பாடியவர்:திருநாவுக்கரசர்
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
கேட்டைக்குரிய திருமுறை:பாடியவர்:திருநாவுக்கரசர்
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
தொல்லை ஏற்றினார் கொடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
மூலத்துக்குரிய திருமுறை:பாடியவர்:சுந்தரர்
கீளார் கோவணமும் திருநீறுமெய் பூசி உன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏன்று கொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
பூராடத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்துமானாய்
மன் ஆனாய் மன்னவர்க்கோர் அமுத மானாய்
மறை நான்கு மானாய் ஆறங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே.
உத்திராடத்துக்குரிய திருமுறை:பாடியவர் சுந்தரர்
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையானே
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன்
ஒருபிழை பொறுத்தல் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர்பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவாடுதுறையுள்
அறவனேஎனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே.
திருவோணத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதம்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.
அவிட்டத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.
சதயத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
பூரட்டாதிக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் கரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதிக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே! அரண் நாமம்
கேளாய் நம்கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே.
ரேவதிக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
நாயுனும் கடைபட் டேனை
நன்னெறி காட்டி யாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சின் உள்ளே
நிலவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
நோக்கிநீ அருள்செய் வாயே.
ஓம்சிவசக்திஓம்
 
thanks aanmika kadal

Sunday 27 April 2014

Route MAP - Important Temples and Navagraha Temples

Navagraha Temples Info , Pariharam and Prayers

Navagraha Temples in Chennai

  1. Kolappaakkam Sri Agatheeswarar Temple - Navagraha Sthalam for Sri Suryan
  2. Somangalam Sri Somanaadheeswarar Temple -Navagraha Sthalam for Sri Chandran
  3. Poondhamalli Sri Vaidheeswarar Temple (Uthara Vaidheeswaran Koil) - Navagraha Sthalam for Sri Angaaragan
  4. Kovur Sri Sundhareswarar Temple - Navagraha Sthalam for Sri Budhan
  5. Porur Sri Ramanaadheswarar Temple (Uthara Raameswaram) - Navagraha Sthalam for Sri Guru
  6. Maangaadu Sri Velleeswarar Temple - Navagraha Sthalam for Sri Sukran
  7. Pozhichalur Sri Agatheeswarar Temple (Vada Thirunallaaru) - Navagraha Sthalam for Sri Saneeswarar
  8. Kunrathur Sri Naageswarar Temple (Vada Thirunaageswaram) - Navagraha Sthalam for Sri Raahu
  9. Gerugambaakkam Sri Neelakandeswarar Temple - Navagraha Sthalam for Sri Kethu
Picture 

FROM

 

Navagraha Sthalams of Thondai Mandalam -CHENNAI

Thursday 3 April 2014

முசுமுசுக்கை அடை

எங்கள் நாவல் மூலிகை உணவகத்தில் பலரும் விரும்பிக் கேட்கும் உணவு முசுமுசுக்கை அடைதான். இந்த வாரம் அதன் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.
முசுமுசுக்கைகொடி வகையைச் சேர்ந்தது. இது வயல்வெளிகளில், காடுகளில், நிலங்களில் தானாக வளரக்கூடியது. நம் முன்னோர்கள் இதன் மருத்துவக் குணத்தை அறிந்து உணவில் அடையாகச் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்து சில நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தினார்கள். சித்தர்கள் இதன் வடிவமைப்பைப் பார்த்து "இரு குரங்குகளின் கை' என அழைத்தார்கள்.
"இருமலுடனீளை யிரைப்பு புகைச்சல்
மருவுகின்ற நீர்த்தோடம் மாறுந் - திருவுடைய
மானே! முசுமுசுக்கை மாமூலி யல்விலையைத்
தானே யருந்துவார்க்குத் தான்'
இருமல், ஈளை, இரைப்பு, புகையிருமல், மூக்கால் நீர்பாய்தல் (பீனிசம்) என்பன முசுமுசுக்கையால் தீரும் என்கிறது குணவாகடம் நூல்.
புழுங்கலரிசியை நன்கு ஊறவைத்து அதனுடன் சுத்தப்படுத்திய முசுமுசுக்கை இலையைச் சிறிதளவு சேர்த்து, மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். இந்த மாவைத் தோசைக் கல்லில் சிறிது நெய் தடவி, அடையாகச் சுட்டுச் சாப்பிட்டு வர கோழைக்கட்டு, இருமல், தொய்வு முதலியன நீங்கும்.
முசுமுசுக்கைக்கு ஒரு விசேஷம் என்னவென்றால் உண்ட அன்றிரவே வேலை செய்ய ஆரம்பித்துவிடும். குறிப்பாக, சிலருக்கு தூக்கத்தில் அவர்களை அறியாமல் குறட்டை வரும். அதுவும் ஒவ்வொருவருக்கும் விதவிதமான சத்தத்தில் வரும். இது அவர்களுக்கு தெரியாது. ஆனால் அருகே படுத்திருப்பவர்களுக்கு வேதனையாக இருக்கும். இந்தப் பிரச்சனைக்கு இத வரை எந்த மருத்தவத்திலும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்குக் கைகண்ட மருந்து முசுமுசுக்கை. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் அன்றிரவே அது குறட்டையின் அளவைக் குறைக்கும். தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் குறட்டையை உடலை விட்டு விரட்டிவிடலாம்.
அதுமட்டுமல்லாமல், அக்காலங்களில் குழந்தைகளுக்குச் சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றுக்கு முசுமுசுக்கை இலையைப் பறித்துச் சாறெடுத்து வெல்லத்தில் குழைத்துக் கொடுத்தார்கள். இதையே அடையாகச் செய்து தந்து நாமும் அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது குழந்தைகளும் நன்கு சாப்பிட்டு சளி தொல்லையை இல்லாமல் செய்யலாம். குறிப்பாக, நுறையீரல் ஆஸ்துமாவுக்கு முசுமுசுக்கை சிறந்தது. முசுமுசுக்கை இலைக்கு மகத்துவம் இருப்பதைப் போல முசுமுசுக்கையின் வேரும் சமையல் பயன்பாட்டுக்குரியது. செரியாமை, மார்பு எரிச்சல், வாந்தி போன்ற தொல்லைகளுக்கு முசுமுசுக்கை வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து இடித்து நீரைக் காய்ச்சி அதில் போட்டு வெல்லம் கலந்து கஷாயமாகக் குடித்தால் மேற்கண்ட பிரச்னைகள் நீங்கிவிடும்.

- டாக்டர் வீரபாபு
Click Here

Sunday 23 March 2014

ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறை

.

மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.

நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.

பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.

நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.

சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.

வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.

பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.

பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும்.

இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.



Saturday 1 March 2014

Hard Disk -ஐ பாதுக்காப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் இ யங்கிக் கொண்டு இருக் கும் போது, ஏதாவது பி ரச்சினைகளினால் கம் ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செ ய்யசொல்லி அப்படி செ ய்தால் hard disk இல் கு ப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால்
திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய் தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய் ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தா ன் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன்மூலம் உங்கள் HardDisk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனா ல்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தி ல் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவி ல் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் கா ரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப் யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய் து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண் போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழை ந்து C Driveமீது Right Click செ ய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண் டோவில் Tools என்ற Tabஐ தெ ரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என் பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப் போதும் கிளிக் செய்யப் பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரிசெய்துவிடும். இ ரண்டாவது ஒன்றுஉங்க ள் Disk இன் Bad Sectorக ளை scan செய்து அவற் றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தா ல் Check Diskக்கு மிக நீண் டநேரம்எடுத்துக்கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனு ள்ள ஒன்று. நேரம் ஆனாலு ம் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக்செய்து வி ட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக்கொ ண்டுள்ளது எனவே இதனை இ ப்போது செய்ய முடியாது என ச் சொல்லி, அடுத்த முறை கம் ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அத ற்கு வட்டமிடப்பட்டுள்ள தை  கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமா ன பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சி னை எதுவும் இல்லை. இது மு டிந்த வுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப் பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பி க்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக் கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரை வை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட் ரைவ் ) Check Disk க்கு உள் ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலி ல் chkdsk (check Disk )செய்யுங் கள். உங்கள் Hard Disk ஐ காப் பாற்றுங்கள்.

Saturday 8 February 2014

Who is entitled to share in self acquired property of Hindu in Indian Law?

FROM

Khushlikeu’s Blog

One person was allotted a flat in his name. With the passage of time he became father of two children one son and one daughter. Time moved and lot of things changed in his life. Many years later dispute arose between husband and wife. Husband left the flat and stated living with his daughter. At the time of death he left a will in which he bestowed his only property on his daughter.
Now the question is whether he had the right to give that property to his daughter under will?
As per Indian Law a person can give his self acquired property to anyone through Will.
Whether his son has any right in the property?
As the property was a self acquired property therefore son do not have any right in the property.
Whether the wife has any right in the property?
Wife do not have any right in the property because under the will the property was exclusively given to daughter.
What would have happened if he would have died without living behind any will?
In that case the property would be divided among class one heirs.
Who are class one heirs under the hindu law?
Son, daughter, widow, mother, son of a pre-deceased son, daughter of a pre-deceased son, son of a pre-deceased daughter, duaghter of a pre-deceased daughter, widow of a pre-deceased son, son of pre-deceased son of a pre-deceased son, daughter of a pre-deceased son of a pre-deceased son, widow of a pre-deceased son of a pre-deceased son.

Tuesday 4 February 2014

விதவைப் பெண்களுக்கான நிவாரணத்தை நிறுத்தக்கூடாது

முதல் கணவனின் எதிர்பாராத மரணத்திற்கு பின் மறுமணம் செய்து கொள்ளும் விதவைப் பெண்களுக்கான நிவாரணத்தை நிறுத்தக்கூடாது என மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி தர்மதிகாரி தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
"பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றே சட்டம் கூறுகிறது. மறுமணம் செய்து கொண்டார் என்பதனால், முதல் கணவருடன் அந்தப் பெண் வாழ்ந்ததையோ, குழந்தைப் பெற்றுக் கொண்டதையோ, அந்தக் குழந்தையை பேண முதல் கணவரின் துணையை அவர் இழந்து விட்டார் என்பதையோ மறுக்க முடியாது. எனவே மறுமணம் ஆனாலும் அவருக்கான நிவாரணம் கொடுக்கப்படவேண்டும்" என அமர்வு உத்தரவிட்டது.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த விபத்து இழப்பீடுகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொண்டதால் அவருக்கான நிவாரணத்தை தர மறுத்தது. ஆனால் அவரது பெண்ணிற்கு வழங்கியது.
மும்பை நகரில் வசித்து வந்த சந்தீப் புரந்தரே, ஜுலை 5, 2006 அன்று அந்தேரி பகுதியில் நடந்த விபத்தில் காலமானார். இதற்கான நிவாரணமாக சந்திப்பின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாயை தீர்ப்பாயம் வழங்கியது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிவாரணத் தொகையை வட்டியுடன் சேர்த்து 66.98 லட்சமாக உயர்த்தியது. முதலில், இறந்தவரின் வருமானம் ஒழுங்காகக் கணக்கிடப்படவில்லை, அவர் உயிரோடு இருந்தால் சம்பாதித்திருக்கக்கூடிய பணத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள் வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும், 67 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையில் 20 சதவீதம் இறந்தவரின் மனைவிக்கும், 60 சதவீதம் அவரது 11 வயது மகளுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் அவரது தாயாருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதோடு வழக்காடுதலுக்கான செலவுகளுக்கு 30,000 ரூபாய் தரச் சொல்லியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த குழந்தையின் படிப்புச் செலவுக்கும், அன்றாட செலவுகளுக்கும், எதிர்காலத்தில் திருமண செலவுகளுக்கும் பணம் தேவைப்படும் என்பதாலேயே நிவாரணத்தின் பெரும் பங்கு குழந்தைக்கு என நீதிமன்றம் கூறியுள்ளது. இத்தொகையை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Monday 3 February 2014

பெண்களின் உண்மையான சொத்துரிமை

FROM DINAKARAN

பெரும்பாலான நாட்டுச் சட்டங்கள் ஆணுக்குப் பெண் சமம் என்றே கூறுகின்றன. சமுதாய சிந்தனை அப்படி இல்லை என்பதுதான் வேதனை. பெண்களுக்கான  சட்டங்கள் இயற்றப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. சட்ட மாற்றங்கள் வந்தாலும், அவை சமுதாய மாற்றங்களைக் கொண்டு வருவதில்லை. இது  பெண்களுக்கான சொத்துரிமையிலும் பொருந்தும். ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி... இந்த மண்ணுலகின் மக்கள்தொகையில் பாதி  அளவாக இருக்கும் பெண்கள், மூன்றில் இரண்டு சதவிகிதம் வேலை நேரத்துக்குச் செலவிடுகிறார்கள். அதற்கு மாத ஊதியமாக பத்தில் ஒரு பாகம்  பெறுகிறார்கள். ஆனால், சொத்துரிமையில் நூறில் ஒரு பாகம் மட்டுமே பெற்றுள்ளார்கள்.

இந்த அறிக்கை உலகப்பெண்களின் உண்மையான நிலையை பறைசாற்றுகிறது. ஒரு அடி நிலத்தை தன்னுடையது என்று கூறும் பெண்களின் எண்ணிக்கை  உயரும்போதுதான் பெண் முன்னேற்றம் அடைந்து விட்டாள் என்று கூற முடியும். சொத்து என்பது ஒரு தனிநபர் சுயமாக சம்பாதித்த அல்லது  மூதாதையரிடமிருந்து பெறப்பட்ட, அசையும் மற்றும் அசையாச் சொத்துகளாகும். சுயமாக சம்பாதித்த சொத்தினை ஒருவர் அவர் விருப்பப்பட்ட ஆண் - பெண்  யாருக்காவது செட்டில்மென்ட் மூலமாகவோ, தானமாகவோ, உயில் மூலமாகவோ கொடுக்க இயலும்.

ஆனால், மூதாதையர் சொத்து விஷயத்தில் 2005ம் ஆண்டு வரை ஒரு இந்து ஆண்மகனுக்கு பிறப்பிலிருக்கும் உரிமை, பெண்மகளுக்கு மறுக்கப்பட்டு வந்தது. இந்தியாவில் பெண்களின் சொத்துரிமையை அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையாகக் கொண்டு இருக்கும் சட்டமே முடிவு செய்கிறது.  Common  Civil Code இன்று வரை எட்டாக்கனியாகவே இருக்கிறது. (Sarla Màdgal V Union of India 1995) என்ற வழக்கில்  கொடுக்கப்பட்ட தீர்ப்பில், இந்திய அரசியல் சாசனத்தின் ஷரத்து 44ல் (Directive Principles of State Policy) Common  Civil Code ன் அவசியம் நீதிமன்றத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதனால், திருமணம், சொத்துரிமை போன்ற தனிமனித உரிமைகள் அவரவர் மதத்தின் அடிப்படையில் இயற்றும் சட்டப்படி செயல்படுகிறது. மேலும்,  ஒவ்வொரு மதமும் வெவ்வேறு விதமாக பெண்களின் நிலையை நோக்குகிறது. நம் நாட்டில் ஆங்கில ஆட்சியின் தாக்கத்தால் அதே சட்டங்கள் சில பல  மாற்றங்களுடன் இன்னும் நடைமுறையில் உள்ளன. அப்படி பாரம்பரியம் மிக்க இங்கிலாந்து நாட்டு பெண்களுக்குமே வெகு காலம் சொத்தில் சம உரிமை  தரப்படவில்லை. Equity Courts என்று சொல்லப்படுகிற அந்த நீதிமன்றங்களே சொத்துரிமை விஷயங்களில் முதன்முதலில் ஆணுக்கு  நிகராக பெண்களை வைத்துப் பார்த்தன.

இந்தியாவில் பெண்களின் சொத்துரிமை நிலையை சரி செய்ய 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சில சட்டங்கள் இயற்றப்பட்டன. The Hindu  Women‘s Rights to Property Act 1937, The Indian Succession Act 1925 போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்துப் பெண் சொத்துரிமை ஏட்டளவில் தொன்று தொட்டு பெண்கள் அசையும் மற்றம் அசையா சொத்துகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததை  சரித்திரத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம். எனினும், அது ஒரு ஆண்மகனுக்கு நிகரான உரிமையாக இருந்திருக்கவில்லை. ஒரு இந்துப்பெண் கருவறை முதல்  கல்லறை வரை தந்தை, தமையன், கணவர், மகன் என்று ஒரு ஆண் உறவின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்.

இந்த நிலை கிட்டத்தட்ட The Hindu Women's Rights to Property Act 1937 இயற்றப்படும் வரை இருந்தது. இதுவே இந்துப்  பெண்களுக்கான சொத்துரிமையின் முதல் படி. இச் சட்டம் அன்று சமுதாயத்தின் பெரும்பாலானோர் கூக்குரல் எழுப்பியதன் மூலம் இயற்றப்பட்டதே. எனினும்,  இதுவே பெண்களுக்கு முழு சொத்துரிமையையும் தந்து விடவில்லை. Widow's Limited Estate என்று சொல்லக்கூடிய அனுபவ உரிமையை  மட்டுமே தந்தது. மேலும், 1938ல் விவசாய நிலங்களில் இருந்து பெண்களுக்கு இருக்கும் அனுபவ உரிமையை பறித்துக்கொண்டது.

இந்துப்பெண்களின் சொத்துரிமைக்கான அடுத்த முக்கிய மைல் கல் The Hindu Succession Act 1956. இந்துப்பெண்களுக்கு 1956க்கு முன்  சொத்துரிமை என்பதில் சீதனச் சொத்து மற்றும் சொத்துகளில் அனுபவிக்கும் உரிமை மட்டுமே இருந்தது. Women‘s Estate என்பது அனுபவ உரிமை  மட்டுமே கொண்டு கிடைக்கப்படும் பெண்ணுக்கான சொத்து. அவ்வாறு பெறப்படும் அந்த அனுபவ உரிமை சொத்தை யாருக்கும் உரிமை மாற்றம் செய்வது தடை  செய்யப்பட்டது. மற்றும் அவளுடைய இறப்பிற்குப் பின் சொத்தின் உரிமையாளருக்கு பிறகு இருக்கும் ஆண் வாரிசுகளுக்கு சென்றடையும்.

ஆண்மகனுக்கு நிகராக பெண், தனது மூதாதையர் சொத்தில், உயில் எழுதப்படாத தகப்பன் வழி சொத்தில் உரிமை கோர இயலாது. ஒரு பெண் தனது  Stridhana சொத்தினை மட்டும் உரிமை கோருவது தொன்றுதொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ள ஒரு வழக்கம். இந்த இடத்தில்    Stridhana என்ற வார்த்தையின் அர்த்தத்தை உச்ச நீதிமன்றம் ‘Rashmi Kumar Vs Mahesh Kumar Bhada(1997)  2 SCC 397’ வழக்கில் விளக்கியுள்ளது. ‘திருமணத்தின் முன்னும், அந்த நிகழ்வின் போதும் பெண்களுக்கு, அவர்களுக்காக உறவினர்களால் கொடுக்கப்படும்  அசையும் மற்றும் அசையா சொத்துகள் என்றும், அவற்றின் முழு உரிமை அந்தப் பெண்ணையே சாரும்.

மேலும், கணவர் அவற்றினை உபயோகப்படுத்த நேரிட்டாலும் வரும் காலத்தில் அதனை ஈடு செய்வது அவசியம்...’ முதன்முதலாக இந்துப்பெண்களுக்கு  சொத்துரிமை என்பது கோடிட்டு காட்டப்பட்டது The Hindu Succession Act 1956ல்தான். அச்சட்டத்தின் 14வது பிரிவின் கீழ்  முதன்முதலாக ஒரு இந்துப்பெண்மணி வாரிசுரிமையின் மூலமாகவோ, ஜீவனாம்சத்தின் மூலமாகவோ, உறவினர் மற்றும் உறவினர் அல்லாதவரிடம் இருந்து  திருமணத்துக்குப் பிறகு கிடைக்கும் சொத்துகள் மேலும், சொந்த முயற்சியின் மூலம் பொருளீட்டி வாங்கிய சொத்துகள், உயிலின் மூலமாக ஒரு பெண் பெற்ற  சொத்துகள் அல்லது ஒரு சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கிடைக்கப்பெறும் சொத்துகள் போன்ற அனைத்துச் சொத்துகளும் பெண்களின் முழு  உரிமையுடைய சொத்துகளாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு பெண் தான் அடையும் அல்லது தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சொத்துக்கு முழு உரிமைதாரர் ஆகிறார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த  நாளுக்கு முன் இருந்தே இந்த 14ம் பிரிவு அமலுக்கு வரும் (Retrospective Effect). இச்சட்டம் இயற்றப்பட்ட பின் பல சொத்துரிமை  வழக்குகள் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டின. நமது உச்ச நீதிமன்றம் பெண்களின் சொத்துரிமையை நிலைநாட்டும் வண்ணமாக பல தீர்ப்புகளை வழங்கி  பெண்களின் உரிமையை நிலைநிறுத்தியது.

மேலும், இந்துக்களுக்கான சொத்துரிமை மற்றும் வாரிசுதாரர்கள் யார் யார், பெண்களுக்கான சொத்தின் மீது உள்ள உரிமைகள் என்ன என்பன போன்றவை  The Hindu Succession Act 1956ல் குறிப்பிடப்பட்டுள்ளன. இது போல, பெண்களுக்குக் கிடைக்கும் சொத்துகளுக்கு அவர்களது  மறைவுக்குப் பிறகு வாரிசுதாரர்களாக பிரிவு 15(1)ன்படி...

1. மகன், மகள் (அவருக்கு முன்பு இறந்த மகன்களின் வாரிசுகள்), கணவர்.
2. கணவரின் வாரிசுதாரர்கள்
3. தாய், தந்தை
4. தந்தையின் வாரிசுதாரர்கள்
5. தாயின் வாரிசுதாரர்கள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளார்கள்.

பிரிவு   15(2)a  - ஒரு இந்துப்பெண்ணுக்கு தாய் தந்தையின் மூலம் கிடைக்கப்பெறும் சொத்து, மகனோ, மகளோ அல்லது அவருக்கு முன்னே இறந்து போன  மகனின்-மகளின் வாரிசுகள் உயிரோடு இல்லாத பட்சத்தில் தாய் அல்லது தந்தையின் வாரிசுகளுக்குப் போய் சேரும். பிரிவு  15(2)(b)   ஒரு இந்துப்  பெண்ணுக்கு கணவர் அல்லது மாமனார் மூலம் கிடைக்கப்பெறும் சொத்து, மகனோ, மகளோ அல்லது அவருக்கு முன்னே இறந்து போன மகனின் - மகளின்  வாரிசுகள் உயிரோடு இல்லாத பட்சத்தில் கணவரின் வாரிசுதாரர்களை போய் சேரும்.

இந்துப்பெண்களுக்கு 2005ம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் மூலம் ஆணுக்கு நிகராக சொத்தில் சம உரிமை கிடைத்தது. எனினும், சில மாநிலங்களில்...  எடுத்துக்காட்டாக, ஆந்திரப்பிரதேசம் (5.9.1985), மகாராஷ்டிரம் (22.6.1994) மற்றும் தமிழ்நாடு (25.3.1989)ல் குறிப்பிடப்பட்ட தேதியில் இருந்தே அந்தந்த  மாநிலங்களைப் பொறுத்த வரை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு மூதாதையர் சொத்தினில் சம உரிமை கொடுக்கப்பட்டது.

2005ம் ஆண்டின் சட்டத் திருத்தத்தின் The Hindu Succession Act படி பிரிவு 29(a) மூலம் இந்த உரிமை இன்றுவரை நிலை  நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிடும்படி சமீபத்தில் 2011ம் ஆண்டு Ganduri Koteshwaramma and another Vs  Chakiri Yanadi and another வழக்கு ஆந்திரப்பிரதேசம் உயர்நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின் மேல்முறையீட்டில் மூதாதையர்  சொத்தின் உரிமையில் சகோதரனுக்கும் சகோதரிக்கும் உள்ள உரிமையை நிலைநாட்டக் கோரிய வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் ஒரு பெண்ணுக்கு, ஆணுக்கு  இணையாக மூதாதையர் சொத்தில் இருக்கும் உரிமையை நிலைநாட்டியது. இது மட்டுமின்றி கடமையிலும் பெண்களுக்கு சரிசம பங்கு உண்டு என்று தீர்ப்பு  வழங்கியது.

இஸ்லாமியப் பெண் சொத்துரிமை

இஸ்லாமியப் பெண்களைப் பொறுத்தவரை, பெண் என்ற காரணத்துக்காக எப்பொழுதுமே அவர்களை சொத்துரிமையிலிருந்து விலக்கி வைத்தது கிடையாது.  இஸ்லாமியச் சட்டத்தில் வாரிசுரிமை மற்றும் மதத்தின் வாரிசுரிமையிலிருந்து வேறுபடுகிறது. இஸ்லாம் மதத்தை பொறுத்த வரை சுயசம்பாத்திய சொத்து,  மூதாதையர் சொத்து, பிறப்பின் மூலம் உரிமை பெறும் சொத்து (Coparcenary Property), பாகப்பிரிவினை மூலம் வரும் சொத்து  என்பது போல கிடையாது.

இஸ்லாமியருக்கான சட்டம் வெகுகாலம் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்தது. நம் நாட்டை பொறுத்த வரை Shariat Act 1937 அவர்களுக்காகச்  செய்யப்பட்ட ஒரு சட்டம். அவர்கள் Shariatல்   குறிப்பிடுவது சட்டமாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இஸ்லாமியப் பெண்களைப் பொறுத்த வரை  எப்பொழுதுமே ஆண்களுக்கு சமமாக சொத்தில் பங்கு கோர இயலாது. ஒரு ஆண் வாரிசு இரண்டு பாகம் சொத்தில் பங்கு எடுக்கும் போது, பெண்ணுக்கு ஒரு  பாகமே ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்படும் சொத்து அவர்களுக்கு உரிமையோடு ஒதுக்கப்படுகிறது. மேலும், 1956க்கு முன்பு இருந்த இந்துச் சட்டப்படி    Women's  Estate  போன்றவை இஸ்லாமியச் சட்டத்தில் கிடையாது.

கிறித்துவப் பெண் சொத்துரிமை

கிறித்துவப் பெண்களுக்கு இந்திய வாரிசுரிமை 1956 சட்டத்தின் படி சொத்து குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இச்சட்டத்தின் 36  - 49  பிரிவுகள் கிறித்துவர்களுக்கு பொருந்தும். இந்து மற்றும் இஸ்லாமியப் பெண்மணியை ஒப்பிடும்போது கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் பெண்ணுக்கு மூதாதையர்  சொத்து கோரப்படும் உரிமை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பிரிவு 36ன் கீழ் ஒரு கைம்பெண் மற்றும் இதர வாரிசுதாரர்  (Kindred, lineal descendant) இருக்கும் பட்சத்தில் இறந்தவரின் சொத்தில் மூன்றில் ஒரு பாகம் கைம்பெண்ணுக்கும், மூன்றில் இரண்டு  பாகம் மற்ற நபர்களுக்கும் போய்ச் சேரும்.

அவ்வாறே நேரடி வாரிசுதாரர் (Lineal Descendant) இல்லாமல் தூரத்து உறவு (Distant Kindred) மட்டும் இருக்கும் பட்சத்தில்  இரண்டில் ஒரு பாகம் அந்த கைம்பெண்ணின் பாகமாக வரும். மேலும், ஒரு கைம்பெண்ணுடன் இதர வாரிசுதாரர்கள் யாரும் இல்லாத பட்சத்தில்தான்  முழுச்சொத்தையும் உரிமை கோர இயலும். ஒரு கிறித்துவக் கைம்பெண்ணுக்கு கிடைக்கும் சொத்து வேறு வாரிசுதாரர்களின் நிலையைப் பொறுத்தே அமைகிறது.

Thursday 30 January 2014

விசா பெறுவது எப்படி?

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறு வது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இ ணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தே வையா என தெரிந்து கொள் ள வேண்டும். அதன் பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்ப து எப்படி என அறிய வேண் டும். ஒருசில நாடுகளுக்கு விசாதேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன் கூட்டியே
விசா பெறவேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடி யது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசாஇன்றி வரு ம் சலுகையை வழங்கு கின்றன. இப்படி விசாவு க்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல் லாம் தேடி இணையத்தி ல் அங்கும் இங்கும் அல் லாடாமல், ஒரே இடத்தி ல் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http:// www.visamapper.com) வலைத்தள ம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்ல லாம், எந்த எந்த நாடுகளு க்கு எல்லாம் அங்கேபோய் சாவ காசமாக விசா வாங்க லாம் போன்ற தகவலகளை இத்தளம் தருகிறது. அதுவு ம் எப்படி.., அதிகம் தேடா மல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகை யில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுக ள் பல் வேறு வண்ணங்களி ல் சுட்டிக்காட்டப்பட் டுள்ள ன. அந்த வண்ணங்களுக் கான அர்த்தம் அருகே உள் ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்க ளை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறை யை தெரிந்துகொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சைவண்ண த்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசாபெற வேண்டும். வெளிர்பச்சை என்றால் விசாவே வேண் டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார் த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா மு றை என்ன என அறிந்து கொ ள்ளலாம். இந்த வரைபடத் தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டா ம், அதுவாகவே விவரங்க ளை காட்டுகிறது என்பது தா ன். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்துகொ ண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக கா ட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இ ந்தியாவுக்கான இடம் குடியிருக்கு ம் நாடு என காட்டப்படுகிறது. இந் தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ண ங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும்போது அவரது நாட்டுக் கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லை யா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ‘நான் இந்த நாட் டு குடிமகன்’ என குறிக்கும் கட்ட த்தில் ஒருவர் தனக்கான நாட் டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொ ள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய் து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின் றனபோன்ற தகவல்க ளையும் தெரிந்துகொள் ளலாம். உலகஅரசிய லை அறிவதற்கான சின் ன ஆய்வாகவும் இது அ மையும். உலக அரசியல் யாதார்த்ததை யும் இதன் மூலம் அறிந்து கொள்ள லாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சய ம் உதவியாக இருக்கும். ஆ னால் ஒன்று, இது ஒரு வழி காட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகார பூர்வ மானதாக கொள்வதற்கில் லை. தகவலை எளிதாக தெரி ந்து கொண்டு அதனை அதி காரபூர்வ தளங்களின் வாயி லாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத் திலேயே, விடு பட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழை யான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்ப ட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net) எனும் வலைத்தளமும் விசா தொடர்பா னதகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள் ளன போன்ற தகவல்களையும் அ ளிக்கிறது. விசா நோக்கில் பிரபல மான நாடுகளின் பட்டியலும் இரு க்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆ னால் இந்த தளமும் வழிகா ட்டி நோக்கிலானதுதான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வே ண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆ சைப்படுபவர்களுக்கும்,போ க இருப்பவர்களுக்கும் இத்த ளங்கள் பயனுள்ளவைகளா க இருக்கின்றன.

Friday 24 January 2014

போட்டோஷாபின் புதிய பதிப்பு கிரியேடிவ் கிளவுட் இலவசமாக

vadakaraithariq.blogspot.com

ஸ்டுடியோகளில் நமது புகைப்படங்களை அழகுபடுத்தவும், பேனர் வைக்கவும், பல்வேறு டிஜிட்டல் வேலைகளுக்கு போட்டோஷாப்தான் பயன்படுத்தி வருகின்றனர். போட்டோ எடிட்டிங் துறையில் இன்றைக்கும் முதலிடத்தில் இருக்கும் அடோப் நிறுவனத்தின் 14 வது பதிப்பாக போட்டோ ஷாப் கிரியேடிவ் கிளவுட் வெளியாகியுள்ளது.



அதனை இலவசமாக இங்கே பெற்றுக்கொள்ளவும். இது ஒரு கிராக் செய்யப்பட்ட மென்பொருள் அதனால் நீங்கள் தனியாக கிராக் செய்ய தேவைஇல்லை. நேரடியாக இன்ஸ்டால் செய்யது பயன்படுத்தலாம். அளவும் குறைவு 300 Mb தான்.

PhotoShop CC - Download Here



போட்டோ ஷாப் கிரியேடிவ் கிளவுடின் புதிய வசதிகள்




www.vadakaraithariq.blogspot.comCamera Shake Reduction
Perspective Warp
All-new Smart Sharpen
Real-time image asset generation powered by Adobe Generator
Linked Smart Objects
Intelligent upsampling
Adobe Camera Raw as a filter and Adobe Camera Raw 8
3D printing
Editable rounded rectangles and other shapes
Multiple shape and path selection
Mercury Graphics Engine performance boost
Content-Aware family of technologies
Improved 3D painting and effects
Photoshop Extended features included


PhotoShop CS 6 முழுபதிப்பு இலவசமாக

PhotoShop CS 5 முழுபதிப்பு இலவசமாக

PhotoShop சம்பந்தமாக மேலும் பல்வேறு பதிவுகள்

PhotoShop இன்ஸ்டால் பண்ணியாச்சு அடுத்து, கவலையே வேண்டாம் சகோதரர் கான் இருக்கிறார். அடிப்படையில் இருந்து அனைத்தையும் கற்று கொடுத்துவிடுவார். பாடங்களை pdf பைல்களாக தருவார் மிகவும் பயனுள்ள வலைத்தளம்.

கான் அவர்களின் வலைத்தளம்


from
http://vadakaraithariq.blogspot.in