Thursday 27 September 2012

Blogger Custom Domain Settings

பிளாக்கரில் தங்கள் சொந்த டொமைன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் கூகுள், பிளாக்கர் Domain Add செய்வதற்கு CNAME செட்டிங்க்ஸ் பகுதியில் ஒரு புதிய Record சேர்த்துள்ளது. இதன் காரணமாக புதியதாக டொமைன், சப்-டொமைன் போன்றவற்றை சேர்ப்பவர்களுக்கு Domain Verify -யில் பிரச்சினை என்று வரும். அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். 

நீங்கள் டொமைன் அல்லது சப்-டொமைன் Add செய்யும் கீழே உள்ள பிரச்சினை வரும். 

“We have not been able to verify your authority to this domain. Error 12. Please follow the settings instructions.”

படம் : 

உங்கள் டொமைன் பெயருக்கு கீழே உள்ள "Settings Instructions" என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் "Blogger Custom domain Instructions" பக்கத்துக்கு வருவீர்கள். 

அதில் நீங்கள் Domain அல்லது Sub-domain என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும். [நீங்கள் எதை Add செய்கிறீர்களோ அதை]


இப்போது வரும் பக்கத்தில் CNAME Add செய்வதற்கான வழி முறை இருக்கும். பெரும்பாலும் நீங்கள் முதல்  CNAME  Add செய்து இருப்பீர்கள். (www, ghs.google.com என்பது). 

இப்போது புதியதாக இரண்டாவது ஒன்றை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அதையும் CNAME Record - இல் தான் Add செய்ய வேண்டும். அது கீழே படத்தில் சிவப்பு கட்டத்தில் உள்ளது [படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணவும்]


இதே போன்று உங்களுக்கும் ஒன்று இரண்டாவது  CNAME  ஆக வரும். அது சில மாற்றங்களுடன் இருக்கும். ஒவ்வொரு டொமைன்க்கும் ஒவ்வொன்று.

இப்போது நீங்கள் டொமைன் வாங்கிய தளத்திற்கு சென்று, உங்கள் டொமைன் Settings பகுதியில் DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும்.  இதில் Destination ஆக உள்ள மிகப் பெரிய ஒன்றில் .com க்கு பிறகு ஒரு முற்றுப் புள்ளி இருக்கும் [dot] அதை கொடுக்க வேண்டாம்.

Bigrock தளத்தில் டொமைன் வாங்கியவர்கள் கீழே படத்தில் உள்ளது சேர்க்க வேண்டும். உங்களுக்கான  CNAME  Settings ஐ என்பதை மறந்து விடாதீர்கள்.


Bigrock மூலம் Domain வாங்கியவர்கள் முதல் டொமைன் Add செய்வது பற்றிய தெளிவான பதிவை இங்கே படிக்கவும் - BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

இதை செய்து முடித்த பின் 6-8 மணி நேரங்களுக்கு பிறகு உங்கள் டொமைன் அல்லது சப்-டொமைனை Add செய்து பாருங்கள். வேலை செய்யும். 

மீண்டும் பிரச்சினை என்றால் மீண்டும் பதிவை படிக்கவும். சரியாக செய்யாவிட்டால் மட்டுமே இது வேலை செய்யாது. 

வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் கீழே கேட்கவும். 

ஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

THANKS - Tech Hints

oru chirri kandal

TAMILVAASI

Tuesday 25 September 2012

softwares

from vandhemadhram

ஐந்து இலவச மென்பொருட்களின் புதிய பதிப்புகள் டவுன்லோட் செய்ய

இணையத்தில் ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது. அந்த வரிசையில் இன்று ஐந்து பயனுள்ள மென்பொருட்களையும் அந்த மென்பொருளின் புதிய வெர்சன்களை டவுன்லோட் செய்வது பற்றியும் இங்கு காண்போம். காசுகொடுத்து வாங்கும் சில மென்பொருட்களில் இல்லாத வசதிகள் கூட கீழே உள்ள இந்த மென்பொருட்களில் உள்ளது.

1. Google Chrome

இணைய உலகில் மிகப்பெரிய இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டு இருக்கும் உலவி. இதன் வளர்ச்சி மற்ற பிரவுசர்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. ஏராளமான வசதிகள், நீட்சிகள், சிறந்த வேகம், சரியான வடிவமைப்பு போன்ற காரணங்களால் இந்த மென்பொருளை பெரும்பாலானவர்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். இந்த புதிய பதிப்பில் பல்வேறு வசதிகளை புகுத்தி உள்ளனர். இந்த வசதிகளை அறிய இங்கு செல்லவும்.  இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Chrome 21

2. Firefox

உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் உலவிகளில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கூகுள் குரோம் வந்த பிறகு இதன் வளர்ச்சி விகிதம் குறைந்தாலும் எண்ணற்ற வசதிகளை கொண்டுள்ளதால் நிறைய பேரின் விருப்பத்திற்கு உரிய மென்பொருளாகும். உலாவிகளின் கடும் போட்டியை சமாளிக்க மொசில்லா நிறுவனமும் அடிக்கடி உலவியை அப்டேட் செய்து வெளியிடுகின்றனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - Firefox 14.01

3. PicPick

பதிவர்களுக்கு பெரும்பாலும் பயன்படும் மென்பொருள் இது. கணினி திரையை சுலபமாக ஸ்க்ரீன் ஷாட் எடுப்பது மட்டுமின்றி இந்த மென்பொருள் மூலம் ஸ்க்ரீன் ஷாட்களுக்களை அழகாக உருவாக்கலாம். அது மட்டுமின்றி Color Picker, Magnifier, white board போன்ற பல வசதிகள் இந்த மென்பொருளில் உள்ளது. மற்றொரு விஷயம் இந்த மென்பொருளை உபயோகிப்பது மிகவும் சுலபம். இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளனர். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய PicPick v3.1.6

4. Opera

மிக வேகமான இணைய உலவி என பெயர் பெற்றது ஒபேரா உலாவியாகும். பல எண்ணற்ற வசதிகளை இந்த உலவி கொண்டுள்ளது. இப்பொழுது இந்த மென்பொருளின் புதிய பதிப்பை ஒபேரா நிறுவனத்தினர் வெளியிட்டு உள்ளனர்.
இதன் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - Opera 12.01 Final

5. CCleaner


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில் நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற இலவச மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். கணினியில் வேண்டாத பைல்கள்,குக்கீஸ்களை மற்றும் இதர தேவையில்லாத பைல்களை கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க உலகளவில் அனைவரும் விரும்பி உபயோக படுத்துவது இந்த CCleaner என்ற இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளின் புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய - CCleaner v3.21

Monday 17 September 2012

கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக


கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினி வந்துவிட்டது. இதனால் கணினி பற்றித் தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர் டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.

1. திரையில் உள்ளவற்றை பெரிதுப்படுத்திப் பார்க்க Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு + பட்டனை அழுத்துங்கள். சிறிதுப்படுத்த Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு - பட்டனை அழுத்துங்கள். அல்லது Cntrl  பட்டனை அழுத்திக் கொண்டு மவுசில் உள்ள சக்கரத்தை முன்பக்கம், பின்பக்கம் நகர்த்தி செய்யலாம்.

2. ஏதாவது ஒரு வார்த்தையை Select செய்வதற்கு அதன் மேல் டபுள் க்ளிக் செய்தால் Select ஆகிவிடும். ஒரு பாராவையே Select செய்வதற்கு அதில் தொடர்ச்சியாக மூன்று க்ளிக் செய்தால் அந்த பாரா (Paragraph) Select ஆகிவிடும்.

3. இணையத்தளங்களை பார்க்கும் போது பக்கத்தின் மேலே செல்வதற்கு Page Up பட்டனையும், கீழே செல்வதற்கு Page Down பட்டனையும் பயன்படுத்தலாம். அல்லது கீழே செல்வதற்கு Space Bar பட்டனையும், மேலே செல்வதற்கு "Shift + Space Bar" பட்டன்களையும் பயன்படுத்தலாம்.

4. ஒன்றிற்கும் மேற்பட்ட திரைகளை திறந்து வைத்திருக்கும் போது, ஒரு திரையில் இருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு "Alt + Tab" பட்டங்களை அழுத்தவும்.

5. நீங்கள் கோப்புகளை Delete செய்தாலும் அது Recycle Bin பகுதியில் இருக்கும் வரை அழியாது. அங்கு சென்று Empty Recycle Bin என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

6. நீங்கள் அழிக்க நினைக்கும் கோப்புகளை Recycle Bin பகுதிக்கு செல்லாமல் முற்றிலுமாக அழிக்க நினைத்தால் "Shift + Delete" பட்டங்களை அழுத்தவும்.

7. இணையத்தளங்களின் முகவரிகளைக் கொடுக்கும் போது முழு முகவரியையும் கொடுக்கத் தேவையில்லை. .com என்று முடியும் தளங்களின் பெயரை டைப் செய்து "Cntrl + Enter" பட்டன்களை அழுத்தினால் போதும். மேலும் .net என்று முடியும் தளங்களின் பெயரை டைப் செய்து "Shift + Enter" பட்டன்களை அழுத்தினால் போதும்.

8. முக்கியமான சில குறுக்கு விசைகள்:

Cntrl + A - அனைத்தையும் Select செய்வதற்கு
Cntrl + C - Copy செய்வதற்கு
Cntrl + X - Cut செய்வதற்கு
Cntrl + V - Paste செய்வதற்கு

9. ஏதாவது சுட்டிகளை(Links) வேறொரு புதிய Window அல்லது Tab-ல் பார்க்க அதன் மேல Righ click செய்து "Open link in new tab" அல்லது "Open link in new window" என்பதை க்ளிக் செய்யலாம்.

10. கணினி திரையில் தெரிபவற்றை ஸ்க்ரீன்ஷாட் (ScreenShot) எடுப்பதற்கு உங்கள் கீபோர்டில் PrtSc (Print Screen) என்பதை க்ளிக் செய்யுங்கள். உடனே கணினியில் திரையில் உள்ளவைகள் Copy ஆகிவிடும்.

பிறகு MS Paint-ஐ திறந்து Cntrl+V அழுத்தி Paste செய்யுங்கள். திரையில் தெரிந்தவை படமாக வந்துவிடும். அதில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் மாற்றங்கள் செய்து, பின் Save கொடுங்கள்.

கணினி அடிப்படைகளை ஆங்கிலத்தில் எளிதாக தெரிந்துக் கொள்வதற்கு: http://tech.tln.lib.mi.us/tutor/welcome.htm

from
 
 bloggernanban.com

Wednesday 12 September 2012

Important softwares


கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்


மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். 
Browser
ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு. 

Antivirus  
அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு. 
File Compression Software 
File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள். 
Image/Graphics editor, paint program, and picture organizer
இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை. 

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள். 
Office Tools 
MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை. 

Monday 10 September 2012

Yeah, don’t do it on 64bit Vista.

Yeah, don’t do it on 64bit Vista.
If you made the mistake of trying to create a GodMode folder on 64Bit Vista (or Windows Server 2008), then explorer.exe will restart over and over.
So how do you get of the folder?  You have 2 choices.
1) You can go to another computer and browse to the desktop on your computer (\\computername\users\USERNAME\desktop\) and delete the GodMode folder.
2) If you have trouble with this (or don’t have another computer) then you can reboot into safe mode command prompt.  Then you can change directories to the desktop (cd c:\users\USERNAME\desktop).  Then run the following command: rd /s “GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}”   Click Y, when asked.
(You can also rename the directory and delete it after you reboot).
Then reboot and everything should be back to normal

Saturday 8 September 2012

geethai1

மனிதனிடம் ஆற்றலிருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லையெனில் பொருள் சேர்க்க இயலாது.இறைவனின் அருள் இருந்தால் தான் முயற்சியும் கை கூடும்.அலை கடலையும்,பல மலைகளையும் கடந்து முயன்றாலும் முயற்சி இல்லையெனில் பொருள் இல்லை .தெய்வ சம்மதம் இல்லா முயற்சியில் என்ன பயன்.உண்மையான இன்பம் என்பது பொருள் ஆசையைத் துறப்பதுதான். ஆசையை நிறைவேற்றுவது இன்பமல்ல.ஆசையே இல்லாமல் இருப்பதுதான் நிலையான இன்பம் பொருள் பெருகப் பெருக ஆசையும் பெருகிக் கொண்டே போகும். ஆசையை அறவே துறப்பதால் ஏற்படும் இன்பம், அதைப் பெறுவதால் ஏற்படும் இன்பத்தை விடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.ஆன்மாவை அலைக்கழிப்பதில் பொறாமை,வஞ்சனை ஆகிய இவற்றைக் காட்டிலும் காமமே மிகவும் சக்தி வாய்ந்தது.இவை அனைத்தையும் வைராக்கியம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்தி வேண்டும்.

Nanal

பலம் வாய்ந்த பகைவனிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நாணலும் கடலும் பற்றிய கதையைப் பீஷ்மர் கூறுகிறார்.

தருமரே! ஒரு சமயம் அசுரர்களின் இருப்பிடமும் நதிகளின் புகலிடமுமான கடலுக்கு ஒரு ஐயம் வந்தது.அது ஆறுகளை நோக்கி 'நதிகளே..உங்கள் வேகமான பிரவாகத்தின் போது பலம் மிக்க வேர்களை வேரோடும், கிளையோடும் கொண்டு வருகிறீர்கள்.ஆனால் நாணலை மட்டும் ஏன் நீங்கள் கொண்டு வருவதில்லை?அது அற்பத்தனமான புல்தானே என்ற அலட்சியத்தால்,அந்த நாணலை விட்டு விடுவீர்களா?உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்' என்றது.அதற்கு கங்கை ஆறு பதில் அளித்தது.

'இந்த மரங்கள் எல்லாம் கொஞ்சமும் பணிவின்றி நிமிர்ந்து நிற்கன்றன.வேகமாக வரும் எங்களைச் சிறிதும் மதிப்பதில்லை.பணிவுடன் வணங்குவதில்லை.அதனால் பலனை அனுபவிக்கின்றன.தம் இடத்தை விட்டுப் பெயர்ந்து தலைகுப்பற எங்கள் பிரவாகத்தில் வீழ்ந்து, அடித்து வரப்பட்டு தங்களை அடைகின்றன.ஆனால் நாணலின் கதையே வேறு..பெரியாரைப் பணிதல் என்பது அதன் தனிக் குணம்.எங்களைக் கண்டு பணிந்து வணங்குகின்றது.அதனால் எங்கள் சினத்திற்கு ஆளாவதில்லை.நாங்கள் வரும் போது வளைந்து கொடுத்துப் பின் நிமிர்ந்து நிற்கின்றது.அது சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு எங்களுக்கு அடங்கி எங்கள் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.அதனால் அதன் இடத்திலேயே இருக்கின்றது.இங்கு வருவதில்லை.எந்தச் செடியாயினும் கொடியாயினும் மரமாயினும் எங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது.ஆதலால் பணிந்து போவது மட்டும் நிலைத்து வாழ்கிறது.பணிவுடைமையை அறியாது விறைத்து நிற்பவை நிலைத்து நிற்காது எங்களால் அடித்து வரப்பட்டு இங்கே நிலை குலைந்து வீழ்கின்றன.'

'கங்கையின் இந்தக் கூற்றிலிருந்து தருமரே! ஒன்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.அரசர்க்கு இக்கதை நல்ல பாடம்.பகைவனின் பேராற்றலின் முன் நிற்க முடியாது என்று தெரிந்தால் அந்த நேரத்துக்குப் பணிதல் வேண்டும்.பின் நாணலைப் போல நிலைத்து வாழலாம்.பகைவரின் ஆற்றலை உணர்த்தும் பணிவின்றி சேண் உயர் தேக்கு போல் நிமிர்ந்து நின்றால் முறிந்து விழ வேண்டியதுதான் என்ற தெளிவு யாவர்க்கும் வேண்டும்' என்றார் பீஷ்மர்.

sattenu


வைராக்கியம்

வைராக்கியம் ஐந்து காரணங்களால் ஏற்படும்.ஒன்று-பெண்டிர் காரணமாகத் தோன்றும்.இரண்டு-நிலம்,தோட்டம்,வீடு முதலான பொருள்களூக்காக ஏற்படும்.மூன்று-வாய்ப்பேச்சு காரணமாக எழும்,நான்கு-பிறவியிலேயே தோன்றுவது ஐந்து-எப்போதோ நேர்ந்த குற்றத்திற்காக உண்டாகும்.இவற்றில் எவ்விதத்தில் வைராக்கியம் ஏற்பட்டாலும்-தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் அவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.வைராக்கியம் என்னும் தீயை நன்மொழிகளாலோ,சாத்திரத்தாலோ போக்க முடியாது.அத்தீயை யாராலும் அணைக்க முடியாது.

kudathu

பகையின் மிச்சமும் கடனின் மிச்சமும் தீயின் மிச்சமும் தீங்கையே தரும்