Monday 27 August 2012

diva


Wednesday 15 August 2012

manam

மனிதர்களுடைய இதயந்தான் என்ன ஆச்சரியமான இயல்பு உடையது? யாரிடத்திலே நம்முடைய அன்புக்குக் கங்கு கரையில்லையோ, அவர் மேலேதான் நமக்குக் கோபமும் அளவு கடந்து பொங்குகிறது. யாருடைய பெயரைக் கேட்ட மாத்திரத்தில் இதயம் கனிந்து உருகுகிறதோ, அவர் எதிரே வரும்போது வாயானது கடும் மொழிகளைச் சொல்கிறது. யாரைப் பார்க்க வேண்டும், பார்க்கவேண்டும் என்று உடம்பின் ஒவ்வொரு நரம்பும் துடித்துக் கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்டவர் வந்த உடனே "ஏன் வந்தாய்?" என்று கேட்பது போல் நடந்து கொள்ளச் சொல்கின்றது. யாருடைய பிரிவினால் உயிரே பிரிந்து போவது போன்ற வேதனை உண்டாகிறதோ அத்தகையவரை உடனே போகச் செய்யும்படியான வார்த்தைகளையும் சொல்லத் தூண்டுகிறது! மனித இருதயம் உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமான இயல்பு உடையதுதான்.

pulao

சிம்பிள் வெஜ் புலாவ்  ^_^

Posted Image

தேவையான பொருட்கள் ;

சீரக சம்பா பச்சை அல்லது பாசுமதி அரிசி - அரைகிலோ
எண்ணெய் - 50- மில்லி
நெய் - 50 மில்லி
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
ஏலம் - 2
கிராம்பு - 2
பட்டை - 2 சிறியதுண்டு
பிரியாணி இலை அல்லது ரம்பை இலை - சிறிது
புளிக்காத மோர் - ஒரு கப்
வெங்காயம் - 1
தக்காளி - சிறியது-1
மிளகாய் -2
கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி - சேர்ந்து கால் கிலோ
மல்லி புதினா - சிறிது
உப்பு - தேவைக்கு

செய்முறை

காய்கறிகளை நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி,இஞ்சி பூண்டு தக்காளி,மிளகாய்,சிறிது மல்லி,புதினா வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.தண்ணீர் சேர்க்க கூடாது,எண்ணெயில் விரைவில் வதங்கி வெந்து விடும்.மோர் ஒரு கப் சேர்க்கவும்,விரும்பினால் தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்க்கவும்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்றே முக்கால் தண்ணீர் வைக்கவும்.
இப்படி கொதிவரும் பொழுது ஊறிய அரிசியை தட்டவும்.உப்பு சரி பார்க்கவும்.

மீடியமாக தீயை வைத்து மூடி வைக்கவும்.புலாவ் வெந்து மேல் வரும்.புலாவை பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.மூடி பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.புலாவ் பாத்திரத்தை திறந்து ஒரு போல் பிரட்டி விடவும்,ஏலம் பட்டை கிராம்பு கண்ணில் பட்டால் எடுத்து விடவும்.மோர் சேர்ப்பதால் வெள்ளையாக சஃப்டாக உதிரியாக வரும்.மோர் இல்லையெனில் தயிர் சிறிது சேர்க்கவும்.

சுவையான சிம்பிள் வெஜ் புலாவ் ரெடி.


இதனை மட்டன்,சிக்கன் கிரேவி,தால்ச்சாவுடன்,பச்சடி,ஃப்ரை ,ஸ்வீட் அயிட்டமுடன் பரிமாறலாம்.வெஜ் பிரியர்கள் சாம்பார்,குருமா,புதினா துவையல்,வெஜ் கட்லெட்,சிப்ஸ்,காலிப்ளவர் ஃப்ரை உடன் செய்தும் அசத்தலாம்.நிஜமாகவே சாம்பாருக்கு இந்த புலாவ் அருமையாக இருக்கும்.

aval dosa

சமையல் குறிப்பு : அவல் தோசை

அவல் என்றதும் நம் எல்லோருடைய நினைவுக்கும் வருவது விநாயகர் சதுர்த்தி + ஆய்த சரஸ்வதி பூஜைகள் தான்.

இதனை அப்படியே சாப்பிடலாம். எங்கள் ஊரில், இதனை தாளித்து சாப்பிடுவார்கள். ஒரு சிலர் கோவில் பூஜை முடித்து, பக்தர்களுக்கு பிரசாதமாக இதனை தருவார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்காத அதிக சத்துக்கள் கொண்ட ஒரு உணவு.

அந்த அவலை கொண்டு செய்வதற்கு மிக எளிமையான ஒரு சிறு உணவு தயாரிப்பதை தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம். அது தான் "அவல் தோசை".

தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு கப்
அரிசி மாவு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
  1. அவலை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. அதன் பிறகு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
  3. அதனுடன், அரிசிமாவு + தேவையான உப்பையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
    ஏற்ப நன்கு கலந்து கொள்ளவும்
  4. மிதக சூடேறிய தோசைகல்லில், இந்த மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி அது பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.
  5. தேவையென்றால், சிறிது நெய் சேர்த்து தோசைகளை தயாரிக்கலாம். இன்னமும் கம கமவென்று சுவையாக இருக்கும்.

samayal

சமையல் குறிப்பு : காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் என்றாலே நம் எல்றோரோட நினைவுக்கும் வருவது "பட்டு சேலை" தான்.

அதை தவிர, நிறைய புராதான கோவில்களும் நிறைந்த இடம். அந்த ஊரின் பெருமையை மேலும் பறைட்சாற்றும் வகையில் வெகு பிரிசித்தம் அந்த ஊரு இட்லி.

அதனை செய்யத்தான் கொஞ்சம் கை பக்குவமும் பொறுமையும் தேவை. இந்த இடுக்கையில், "காஞ்சிபுரம் இட்லி" செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள் :

புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை


தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை :
  1. அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசி + பருப்பு கலவையை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.
  3. தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.
  4. புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.
  5. நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.
  6. கடாயில் எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.
  7. இஞ்சியையும் துருவி சேருங்கள்.
  8. அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.
  9. எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி.