Friday 13 September 2013

parisht

ஆநர்த்தம் என்னும் இடம் துவாரகையைத் தலைநகரமாகக் கொண்ட நாடு என்று மஹாபாரதம் மூலம் தெரிகிறது. பாண்டவர்கள் காட்டுக்குச் சென்ற போது திரௌபதியின் மகன்கள் ஆநர்த்த நாட்டில் வாழ்ந்தனர். அது அபிமன்யு இருந்த இடம். இந்த விவரங்களின் மூலம், ஆநர்த்தம் என்பது குஜராத் மாநிலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சௌராஷ்டிரமும் இந்தப் பகுதியில் வருகிறது.

Friday 6 September 2013

kanikar neethi

தைரியமில்லாதவர்களை அவர்களின் பயத்தைத் தூண்டியும், வீரமானவர்களை அமைதியின் கலைகளைக் கொண்டும், பேராசைக்காரர்களுக்கு செல்வங்களைப் பரிசளிப்பதாலும், தாழ்ந்தவர்களிடம் வீரத்தைக் காட்டியும், அவர்களை நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும்.
"உனது மகனோ, நண்பனோ, சகோதரனோ, தந்தையோ அல்லது ஆன்மிக குருவாகவே இருந்தாலும் அவர்கள் எதிரியானால், வளமையை விரும்பி எந்த மனவுறுத்தலும் இல்லாமல், அவர்களை நீ கொன்றுவிட வேண்டும். சாபங்கள் மற்றும் மந்திரம் மூலமோ, செல்வத்தைக் கொடையாகக் கொடுத்தோ, விஷமிட்டோ, அல்லது ஏமாற்றியோ, ஒரு எதிரி கொல்லப்பட வேண்டும். அவனை எக்காரணம் கொண்டும் அலட்சியத்தால் புறக்கணித்துவிடக்கூடாது. இரு தரப்பும் சமமாக இருந்து, வெற்றியை நிர்ணயிக்க முடியா சமயத்தில், அக்கறையுடன் விடாமுயற்சியில் ஈடுபடுபவன் வளமை பெறுவான்.

எது செய்யப்பட வேண்டும் எதை செய்யாமல் விட வேண்டும் என்பதை அறியாமல், தீய வழிகளில் செல்வது ஒரு ஆன்மிக குருவே ஆனாலும், அவரும் தண்டிக்கப்பட வேண்டும். நீ கோபத்துடன் இருந்தால், அப்போதும் உனது உதட்டில் புன்னகையுடன் பேசி, நீ கோபமில்லாமல் இருப்பதைப் போல காண்பிக்க வேண்டும். வசை மொழி பேசி உனது கோபத்திற்கான குறிப்பைக் காட்டக்கூடாது. பாரதனே, நீ தாக்குவதற்கு முன்னும், தாக்கும்போதும் கூட மென்மையாகவே பேச வேண்டும்! தாக்குதல் முடிந்ததும், பாதிக்கப்பட்டவனிடம் கருணை காட்டி வருந்து, ஏன் கண்ணீரே விடு. பொருளைக் கொடையாகக் கொடுத்தோ, மென்மையான உனது நடத்தையாலோ எதிரி அமைதியாக இருக்கவைத்து, அவன் நிலை சரியில்லாத போது அவனை அடிக்க வேண்டும். பெரிதும் வெறுக்கத்தக்க குற்றவாளி, அறம்சார்ந்து வாழ்வதைக்கண்டு நீ சிரிக்கலாம், அவன் அணிந்திருக்கும் வேடம் கரு மேகங்கள் மலைகளை மறைப்பதைப் போல அவனது குற்றங்களை மறைத்துவிடும். உன்னால் மரணதண்டனை கொடுக்கப்பட்ட மனிதனின் வீட்டை நீ கொளுத்த வேண்டும். பிச்சைக்காரர்கள், நாத்திகர்கள் மற்றும் கள்ளர்களை உனது நாட்டில் வசிக்க அனுமதிக்கவே கூடாது {And thou shouldst never permit beggars and atheists and thieves to dwell in thy kingdom என்கிறார் கங்குலி.} கேலிப் பேச்சாலோ, விஷத்தாலோ, உணர்ச்சிமிக்கப் போராலோ, கூட்டாளிகளை விலைபேசியோ, செல்வத்தைப் பரிசாகக் கொடுத்தோ, அல்லது உனது பலத்துக்குகந்த எந்த வழியிலாவது உனது எதிரியை அழிக்க  வேண்டும். இந்த விஷயத்தில் நீ பெரும் கொடூரனாக செயல்படலாம். மரண கடி கடிக்க, நீ உனது பற்களைக் கூர்மையாக்க வேண்டும். நீ உனது எதிரியை அடிப்பதால் உண்டாகும் விளைவு, அந்த எதிரி மறுபடி தனது தலையைத் தூக்காதவாறு இருக்க வேண்டும். ஒருவனிடம் பயமே இல்லாவிட்டாலும், நீ எப்போதும் அவனிடமும் பயத்துடன்தான் இருக்க வேண்டும். பயமில்லாதவனிடமே பயம் வேண்டும் என்றால், ஒருவனிடம் பயம் இருந்தால் அதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section142b.html#sthash.fmsabIHZ.dpuf
ம். சாபங்கள் மற்றும் மந்திரம் மூலமோ, செல்வத்தைக் கொடையாகக் கொடுத்தோ, விஷமிட்டோ, அல்லது ஏமாற்றியோ, ஒரு எதிரி கொல்லப்பட வேண்டும். அவனை எக்காரணம் கொண்டும் அலட்சியத்தால் புறக்கணித்துவிடக்கூடாது. இரு தரப்பும் சமமாக இருந்து, வெற்றியை நிர்ணயிக்க முடியா சமயத்தில், அக்கறையுடன் விடாமுயற்சியில் ஈடுபடுபவன் வளமை பெறுவான்.
எது செய்யப்பட வேண்டும் எதை செய்யாமல் விட வேண்டும் என்பதை அறியாமல், தீய வழிகளில் செல்வது ஒரு ஆன்மிக குருவே ஆனாலும், அவரும் தண்டிக்கப்பட வேண்டும். நீ கோபத்துடன் இருந்தால், அப்போதும் உனது உதட்டில் புன்னகையுடன் பேசி, நீ கோபமில்லாமல் இருப்பதைப் போல காண்பிக்க வேண்டும். வசை மொழி பேசி உனது கோபத்திற்கான குறிப்பைக் காட்டக்கூடாது. பாரதனே, நீ தாக்குவதற்கு முன்னும், தாக்கும்போதும் கூட மென்மையாகவே பேச வேண்டும்! தாக்குதல் முடிந்ததும், பாதிக்கப்பட்டவனிடம் கருணை காட்டி வருந்து, ஏன் கண்ணீரே விடு. பொருளைக் கொடையாகக் கொடுத்தோ, மென்மையான உனது நடத்தையாலோ எதிரி அமைதியாக இருக்கவைத்து, அவன் நிலை சரியில்லாத போது அவனை அடிக்க வேண்டும். பெரிதும் வெறுக்கத்தக்க குற்றவாளி, அறம்சார்ந்து வாழ்வதைக்கண்டு நீ சிரிக்கலாம், அவன் அணிந்திருக்கும் வேடம் கரு மேகங்கள் மலைகளை மறைப்பதைப் போல அவனது குற்றங்களை மறைத்துவிடும். உன்னால் மரணதண்டனை கொடுக்கப்பட்ட மனிதனின் வீட்டை நீ கொளுத்த வேண்டும். பிச்சைக்காரர்கள், நாத்திகர்கள் மற்றும் கள்ளர்களை உனது நாட்டில் வசிக்க அனுமதிக்கவே கூடாது {And thou shouldst never permit beggars and atheists and thieves to dwell in thy kingdom என்கிறார் கங்குலி.} கேலிப் பேச்சாலோ, விஷத்தாலோ, உணர்ச்சிமிக்கப் போராலோ, கூட்டாளிகளை விலைபேசியோ, செல்வத்தைப் பரிசாகக் கொடுத்தோ, அல்லது உனது பலத்துக்குகந்த எந்த வழியிலாவது உனது எதிரியை அழிக்க  வேண்டும். இந்த விஷயத்தில் நீ பெரும் கொடூரனாக செயல்படலாம். மரண கடி கடிக்க, நீ உனது பற்களைக் கூர்மையாக்க வேண்டும். நீ உனது எதிரியை அடிப்பதால் உண்டாகும் விளைவு, அந்த எதிரி மறுபடி தனது தலையைத் தூக்காதவாறு இருக்க வேண்டும். ஒருவனிடம் பயமே இல்லாவிட்டாலும், நீ எப்போதும் அவனிடமும் பயத்துடன்தான் இருக்க வேண்டும். பயமில்லாதவனிடமே பயம் வேண்டும் என்றால், ஒருவனிடம் பயம் இருந்தால் அதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section142b.html#sthash.fmsabIHZ.dpuf

Thursday, 5 September 2013

பெண்களுக்கான சொத்து உரிமை

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.
இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.


1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:
முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.
ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.
ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.
இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்''

BY

RAVIKUMAR (MY OPERA)

Monday, 15 April 2013

கொள்ளு

துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.

ஸ்மார்ட் போன் தொலைந்தால்..? ---- உபயோகமான தகவல்கள்,









''ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்’ வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.
'பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அந்நியர் பயன்படுத்துவதற்கு எதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான முறைகளில் மேற்படி பாதுகாப்பை திறக்க முயற்சித்தால், செல்போன் தானாக தனது டேட்டா அனைத்தையும் அழித்துக்கொள்ளும் வகையில் கட்டமைத்துக் கொள்ளலாம். மொபைல் ட்ராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விவரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரச்செய்யுமாறு உள்ளிடலாம்.  
அடுத்ததாக, மொபைல் திருட்டுக்கு எதிரான இன்ஷூரன்ஸ் பற்றி பார்ப்போம். பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் நூற்று சொச்ச ரூபாய்தான். மொபைல் காணாமல் போனது உறுதியானதும் விரைந்து சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை செயல்படாது செய்யுங்கள். பிறகு, அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள். சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.
இந்த சான்றோடு மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விவரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும். இந்தத் தொகை, அநேகமாக அதே ஸ்மார்ட் போனின் சரிந்திருக்கும் தற்போதைய விலைக்கு இணையாக இருக்கும் என்பது ஆறுதல். இந்த வகையில் பண இழப்பை சரிசெய்துவிடலாம்.
ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை... மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு    கோரலாம். செல்போனில் உங்களது பிறந்தநாள், வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்கள், மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டு போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பதியக்கூடாது. இது ஸ்மார்ட் போன் திருடுபோன சூட்டில் உங்கள் வங்கி கணக்கின் இருப்பையும் காணாமல் போக வழி செய்துவிடும்.
இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தனிப்பட்ட கணக்கு தகவல்களை பிறர் அணுகாமல் தவிர்க்க அவ்வப்போது அவற்றிலிருந்து வெளியேறியதும் லாக் அவுட் செய்ய வேண்டும். ஆனால், பலரும் தங்கள் வசதிக்காக, ஒற்றை தொடுகையில் இ-மெயில், ஃபேஸ்புக் போன்றவை திறக்குமாறு வைத்திருப்பார்கள். இவர்கள், ஸ்மார்ட் போன் தொலைந்ததை உறுதிபடுத்திக் கொண்டதும் உடனடியாக வேறு இணைய இணைப்பின் மூலம் தங்கள் இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டால், பிரச்னையிலிருந்து தப்பலாம்.
தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட் போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். காரணம், எடுத்த படங்களை அழித்துவிட்டாலும் அவற்றை மீட்பதற்கான உபத்திரவ தொழில்நுட்பங்கள் நமக்கு பெரும் அச்சுறுத்தலே! மற்றபடி ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.
உங்கள் போனில் இந்த வசதி இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு போன்ற அப்ளிகேஷன்கள் உதவியோடு இந்த பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளலாம். ஸ்மார்ட் போனின் உள்ளடங்கிய மெமரி தவிர்த்து, மெமரி கார்டு போன்ற எளிதில் அகற்றக்கூடிய சேமிப்பு அம்சங்களிலும் இதேபோல அப்ளிகேஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட பாஸ்வேர்டு தருதல், குறிப்பிட்ட ஹேண்ட்செட்டில் இணைத்தால் மட்டுமே அந்த பாஸ்வேர்டும் செயல்படுவது என பல வகைகளிலும் மெமரி கார்டு பாதுகாப்புக்கு அப்ளிகேஷன்கள் கைகொடுக்கும். அரிய படங்களை எப்போதும் மெமரி கார்டிலேயே வைத்திராது, அவ்வப்போது 'பேக்கப்’ எடுத்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.''


"உனது மகனோ, நண்பனோ, சகோதரனோ, தந்தையோ அல்லது ஆன்மிக குருவாகவே இருந்தாலும் அவர்கள் எதிரியானால், வளமையை விரும்பி எந்த மனவுறுத்தலும் இல்லாமல், அவர்களை நீ கொன்றுவிட வேண்டும். சாபங்கள் மற்றும் மந்திரம் மூலமோ, செல்வத்தைக் கொடையாகக் கொடுத்தோ, விஷமிட்டோ, அல்லது ஏமாற்றியோ, ஒரு எதிரி கொல்லப்பட வேண்டும். அவனை எக்காரணம் கொண்டும் அலட்சியத்தால் புறக்கணித்துவிடக்கூடாது. இரு தரப்பும் சமமாக இருந்து, வெற்றியை நிர்ணயிக்க முடியா சமயத்தில், அக்கறையுடன் விடாமுயற்சியில் ஈடுபடுபவன் வளமை பெறுவான்.

எது செய்யப்பட வேண்டும் எதை செய்யாமல் விட வேண்டும் என்பதை அறியாமல், தீய வழிகளில் செல்வது ஒரு ஆன்மிக குருவே ஆனாலும், அவரும் தண்டிக்கப்பட வேண்டும். நீ கோபத்துடன் இருந்தால், அப்போதும் உனது உதட்டில் புன்னகையுடன் பேசி, நீ கோபமில்லாமல் இருப்பதைப் போல காண்பிக்க வேண்டும். வசை மொழி பேசி உனது கோபத்திற்கான குறிப்பைக் காட்டக்கூடாது. பாரதனே, நீ தாக்குவதற்கு முன்னும், தாக்கும்போதும் கூட மென்மையாகவே பேச வேண்டும்! தாக்குதல் முடிந்ததும், பாதிக்கப்பட்டவனிடம் கருணை காட்டி வருந்து, ஏன் கண்ணீரே விடு. பொருளைக் கொடையாகக் கொடுத்தோ, மென்மையான உனது நடத்தையாலோ எதிரி அமைதியாக இருக்கவைத்து, அவன் நிலை சரியில்லாத போது அவனை அடிக்க வேண்டும். பெரிதும் வெறுக்கத்தக்க குற்றவாளி, அறம்சார்ந்து வாழ்வதைக்கண்டு நீ சிரிக்கலாம், அவன் அணிந்திருக்கும் வேடம் கரு மேகங்கள் மலைகளை மறைப்பதைப் போல அவனது குற்றங்களை மறைத்துவிடும். உன்னால் மரணதண்டனை கொடுக்கப்பட்ட மனிதனின் வீட்டை நீ கொளுத்த வேண்டும். பிச்சைக்காரர்கள், நாத்திகர்கள் மற்றும் கள்ளர்களை உனது நாட்டில் வசிக்க அனுமதிக்கவே கூடாது {And thou shouldst never permit beggars and atheists and thieves to dwell in thy kingdom என்கிறார் கங்குலி.} கேலிப் பேச்சாலோ, விஷத்தாலோ, உணர்ச்சிமிக்கப் போராலோ, கூட்டாளிகளை விலைபேசியோ, செல்வத்தைப் பரிசாகக் கொடுத்தோ, அல்லது உனது பலத்துக்குகந்த எந்த வழியிலாவது உனது எதிரியை அழிக்க  வேண்டும். இந்த விஷயத்தில் நீ பெரும் கொடூரனாக செயல்படலாம். மரண கடி கடிக்க, நீ உனது பற்களைக் கூர்மையாக்க வேண்டும். நீ உனது எதிரியை அடிப்பதால் உண்டாகும் விளைவு, அந்த எதிரி மறுபடி தனது தலையைத் தூக்காதவாறு இருக்க வேண்டும். ஒருவனிடம் பயமே இல்லாவிட்டாலும், நீ எப்போதும் அவனிடமும் பயத்துடன்தான் இருக்க வேண்டும். பயமில்லாதவனிடமே பயம் வேண்டும் என்றால், ஒருவனிடம் பயம் இருந்தால் அதைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/07/Mahabharatha-Adiparva-Section142b.html#sthash.fmsabIHZ.dpuf

Thursday 5 September 2013

பெண்களுக்கான சொத்து உரிமை

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன்.

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.

பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.
இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.


1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:
முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.
ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.
அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.
பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.
ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.

இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.
இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்''

BY

RAVIKUMAR (MY OPERA)